நாட்டின் முன்னணி தேர்வுப் பயிற்சி நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட், கோயம்புத்தூரில் உள்ள தனது வகுப்பறைப் பயிற்சி மாணவர்களில் 170 பேர் தேசிய தகுதித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வான நீட் யுஜி 2026 தேர்வில் சிறந்த தரவரிசைகளைப் பெற்றுள்ளதாக பெருமையுடன் அறிவித்துள்ளது.
இந்த சிறப்பான சாதனை, மாணவர்களின் தொடர்ச்சியான கடின உழைப்பு, உறுதியான குறிக்கோள் மற்றும் ஒழுக்கமான பயிற்சியின் பிரதிபலிப்பாகும். இதற்கு ஆகாஷ் வழங்கிய கல்வி வழிகாட்டுதல் மற்றும் கட்டமைக்கப்பட்ட கற்றல் சூழலும் முக்கிய காரணிகளாக இருந்தன.
நிதின் தினகர்பாபு அகில இந்திய அளவில் 522-வது இடத்தைப் பெற்றுள்ளார். மேலும், முத்துராகவ் 3347, ஹர்ஷிதா வெங்கடேஷ் 14627, எம். பூமிகா 16354, பிரித்திகா வாசினி 17594 என பல மாணவர்கள் சிறப்பான அகில இந்திய தரவரிசைகளைப் பெற்று கோயம்புத்தூர் மையத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவர்கள் கூறுகையில்: நீட் யுஜி 2026 தேர்வில் சிறந்த தரவரிசை பெற்றது எங்களின் நீண்டநாள் கனவு நனவாகிய தருணமாகும். எங்கள் மீது எப்போதும் நம்பிக்கை வைத்து உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும், தொடர்ந்து வழிகாட்டி ஊக்கமளித்த ஆகாஷ் ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம், என்றனர்.
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் துணை மண்டல இயக்குநர் டி. சிவா பிரசாத் கூறுகையில், "மாணவர்களின் இந்தச் சாதனை, ஆகாஷ் குடும்பம் முழுவதற்கும் பெருமையான தருணமாகும். அவர்களின் ஒழுக்கம், தொடர்ச்சியான முயற்சி மற்றும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஆகியவை தேர்வுத் தயாரிப்பு முழுவதும் அவர்களை தனித்துவமாக வெளிப்படுத்தியது. இந்த சிறப்பான வெற்றிக்காக மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் எதிர்காலத்தில் மேலும் பல உயரங்களை எட்டி, சிறந்த மருத்துவர்களாக உருவாக எங்களது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
