சிஇபிடி பல்கலைக்கழகம், தனது திட்டமிடல் பிரிவின் மூலம் வழங்கப்படும், இரண்டு ஆண்டு கால முழுநேர முதுகலைப் படிப்பான ‘நகரத் திட்டமிடலில் முதுகலை’ (எம்யுபி) மாணவர்களை வரவேற்கிறது. நகர்ப்புற வளர்ச்சியால் உருவாகும் சவால்களை எதிர்கொள்ளும் திறனுடன் உருவாக்கப்பட்ட இத்திட்டம் மாணவர்களை நகர்ப்புற மேம்பாடு, பொதுக் கொள்கை மற்றும் திட்டமிடல் நடைமுறைகளில் விமர்சன சிந்தனையுடன் ஈடுபடக்கூடிய திறமையுடன் உருவாக்குகிறது.
நகர்ப்புறத் திட்டமிடல் முதுகலைத் திட்டம், நகரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள மற்றும் அனைவருக்கும் உள்ளடக்கமான, நிலையான, நிலைத்திறன் வாய்ந்த நகர்ப்புற எதிர்காலங்களை வடிவமைக்க விரும்பும் தனிநபர்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்திய நகர்களின் சூழலில் உண்மையான நகர்ப்புற சவால்களை எதிர்கொள்வதும், பொதுக் கொள்கைகள் மற்றும் மேம்பாட்டு முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதும், நகரங்கள் அனைவருக்கும் சிறப்பாகச் செயல்படுவதற்கு அர்த்தமுள்ள முறையில் பங்களிப்பதும் விரும்பும் மாணவர்களுக்கு இத்திட்டம் சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
நகர்ப்புறத் திட்டமிடலில் முதுகலை (எம்யுபி) பட்டப்படிப்புத் திட்டம், மாணவர்களுக்கு புவியியல் பகுப்பாய்வு, நிறுவன மற்றும் கொள்கை மதிப்பீடு, சூழல் வடிவமைப்பு, திட்டமிடல் கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளில் வலுவான அடித்தளமும், சிறந்த தொழில்முறை தொடர்பு திறன்களும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக ‘ஸ்டுடியோ சார்ந்த கற்றல்’ செயல்படுகிறது; இதற்கு துணையாக, கருத்தியல், பகுப்பாய்வு மற்றும் நடைமுறை ஆழத்தை மிகவும் பயனுள்ள அறிவியல் சார்ந்த பாடங்களும் வழங்கப்படுகின்றன. மேலும், நிதி அறிவு, நிர்வாக அமைப்புகள் மற்றும் காட்சி தொடர்புத்திறன் ஆகியவற்றுக்கும் இத்திட்டத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
எம்யுபி திட்டத்தில் பட்டம் பெறும் மாணவர்கள், சமூக மற்றும் சுற்றுச்சூழல் உணர்வை வலுவான நிறுவனப் விழிப்புணர்வு மற்றும் தொழில்முறை திறனுடன் இணைத்து செயல்படும், திறமையான நகர்ப்புறத் திட்டமிடுபவர்களாக தங்களது தொழில்வாழ்க்கையை துவங்குகின்றனர். இத்திட்டம், இளம் தொழில்முறை வல்லுநர்களை, தனியார் மற்றும் பெருநிறுவன துறைகள், அரசுப் பிரிவுகள் மற்றும் முகமைகள், நகரத் திட்டமிடல் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையங்கள், பொது வீட்டு வசதி முகமைகள், நிர்ணய அடிப்படையிலான குடியிருப்புகளுக்காக பணியாற்றும் அரசு சாரா நிறுவனங்கள், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள், சிந்தனைக் குழுக்கள் போன்ற பல்வேறு அமைப்புகளில் ஆலோசகர் அல்லது முக்கிய பொறுப்புகளில் செயல்படத் தயாராகின்றனர்.
செல்லுபடியாகும் கேட் மதிப்பெண்களைக் கொண்ட விண்ணப்பதாரர்கள், திட்டத் தேவைகளுக்கேற்ப விண்ணப்பிக்கலாம். கேட் 2026 தேர்வில் கலந்துகொள்ளவோ, தகுதி மதிப்பெண் பெறவோ முடியாத விண்ணப்பதாரர்களுக்காக, சிஇபிடி பல்கலைக்கழகம் ஒரு மாற்று வாய்ப்பாக சிஇபிடி பிஜி தேர்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்த தேர்வு முழு இணையவழியில் நடத்தப்படும், மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் இருப்பிடத்தில் இருந்தே எழுதலாம். இதன் மூலம், இந்தியாவிலுள்ள பல்வேறு புவியியல் பகுதிகளிலிருந்தும் விண்ணப்பதாரர்கள் இணைப்பு பெற முடியும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் மார்ச் 31, 2026 ஆகும். மேலும் விபரங்களுக்கு கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800-270-4030 மற்றும் +91-79-68310000 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். +91 90810 99446 எண்ற எண்ணில் வாட்ஸ் அப்பிலும், admissions@cept.ac.in என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.