தநைரா புதிய திருவிழாக் கால புடவைத் தொகுப்பான மியாரா அறிமுகம் மூலம் கொண்டாட்டத்திற்கு தயாராகிறது



டாடா நிறுவனத்திலிருந்து பெண்களின் பாரம்பரிய உடைகள் நிறுவனமாகப் புகழ்பெற்ற தநைரா பண்டிகைக்கால புடவைத் தொகுப்பான ’மியாரா’ -வை புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கிறது. மியாரா புடவைகள் நெசவு கைவினைஞர்களின் கைகளால் நெய்யப்பட்ட, தூய்மையின் அடையாளமான புடவைகளாக அறிமுகமாகியுள்ளன. 

இன்றைய நவநாகரிக பெண்களுக்காகவே கைவினைக் கலைஞர்களால் பிரத்தியேகமாக நெய்யப்பட்ட இந்த புடவைகளின் வகைகள் இன்றைய காலகட்டத்தின் நவீன வடிவமைப்புகளை, நம்முடைய பாரம்பரிய கலைநயத்தோடு ஒன்றிணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தப் புடவைகள், எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தனித்துவமான வடிவமைப்பு அம்சங்களை வெளிப்படுத்துகின்றன. இந்தியாவின் பன்முகத்தன்மை வாய்ந்த பட்டு மற்றும் பருத்தி நெசவு மரபுகளையும், பல்வேறு கைவினை திறன்களையும் வெளிப்படுத்தும் வகையில், மியாரா சேலைகள் ஒவ்வொரு பண்டிகைகளின் கொண்டாட்டங்களை உணரும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பண்டிகைக் கால கொண்டாட்டத்தை மேலும் உற்சாகமானதாக மாற்றும் வகையில் ‘தி கிஃப்ட் ஆஃப் பியூர் லவ்’என்ற தநைராவின் சமீபத்திய பிரச்சாரமானது, புடவையை பண்டிகைகளின் போது நம்முடைய மாறாத அன்பின் பரிசாக அளிக்க உற்சாகப்படுத்துகிறது. பரிசளிப்பதின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் தருணத்தை இப்பிரச்சாரம் வலியுறுத்துகிறது. எந்தவிதமான எதிர்பார்பும் இல்லாத தூய்மையான அன்பை நாம் பார்க்கமுடியாது, ஆனால் அதை உணரமுடியும் என்பதை இந்தப் பிரச்சாரம் முன்மொழிகிறது.

தநைராவில் வாங்கும் ஒவ்வொரு புடவையையும் மறக்க முடியாத தருணமாக்கும் வகையில், பண்டிகைக்கால சிறப்பு தள்ளுபடிகளையும், பரிசு கூப்பன்கள் மற்றும் தங்க நாணயங்களுடன் இந்த மாபெரும் விற்பனை திருவிழாவில் அறிமுகப்படுத்துகிறது தநைரா. வாடிக்கையாளர்கள் மொத்தமாக 10,000 ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு முறை வாங்கும் போதும், அவர்களுக்கு 1,000 மதிப்புள்ள வவுச்சர்கள் வழங்கப்படும்.  50 ஆயிரத்துக்கு மேல் வாங்குபவர்களுக்கு 0.2 கிராம் தனிஷ்க் தங்க நாணயம் சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது.  குறிப்பிட்ட காலம் வரை மட்டும் வழங்கப்படும் இந்த தள்ளுபடி சலுகை அக்டோபர் 20, 2025 வரை மட்டுமே பொருந்தும். தநைரா கோல்டன் குக்கூன் கொள்முதல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் வாடிக்கையாளர்களுக்கு தங்களது கனவு புடவைகளை வாங்குவதற்கு உதவுகிறது.

இந்த தள்ளுபடி அறிமுகத் திட்டத்தைப் பற்றி ஜஸ்வந்த் தாமஸ், குழு மேலாளர் பேசும்போது, “இந்த பண்டிகைக் காலத்தில் நாங்கள் ‘மியாரா’ புடவைத் தொகுப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.  திருவிழாக்களையும் பண்டிகைகளையும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட ஆளுமையையும், அவரது ஃபேஷன் பாணியையும் வெளிப்படுத்தும் அடையாளம். தூய்மையான நேசத்தை வெளிப்படுத்த உதவும் அழகிய பரிசுகளாகவும் புடவைகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. தி கிஃப்ட் ஆஃப் ப்யூர் லவ் என்ற பிரச்சாரம் மூலம் வாடிக்கையாளர்களின் சென்டிமெண்ட்டை உயிர்ப்புடன் வெளிப்படுத்தி இருக்கிறோம்.  எங்களது பிரத்தியேகத் தள்ளுபடிகளின் வாயிலாகவும், கோல்டன் குக்கூன் திட்டம் மூலமாகவும், இந்த பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்கள் உணர்வுப்பூர்வமான பரிசாக அளிப்பதற்கு ஏற்ற வகையில் தநைராவின் புடவைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இந்த பண்டிகைக் காலத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form