லெக்சஸ் நிறுவனம் தனது பிளாக்ஷிப் எஸ்யுவியான புதிய லெக்சஸ் எல்எக்ஸ் 500டி-யின் விநியோகத்தை இந்தியா முழுவதும் தொடங்கியுள்ளது. எல்எக்ஸ் 500டி-க்காக ஆவலுடன் காத்திருந்த வாடிக்கையாளர்கள், இப்போது இந்த எஸ்யுவியை அனுபவிக்கலாம். இது சொகுசு மற்றும் திறனை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்கிறது. மேலும், வலிமை மற்றும் நேர்த்தியில் மிகச்சிறந்த அனுபவத்தைத் தருகிறது.
எல்எக்ஸ் 500டி என்பது இந்தியச் சந்தையில் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது, மிக உயர்ந்த சொகுசு எஸ்யுவிகளுக்கான அதிக டிமாண்டை பிரதிபலிக்கிறது. இந்த எஸ்யுவிக்கள் சிறந்த உரிமையாளர் அனுபவத்தை வழங்குகின்றன. அதன் கம்பீரமான தோற்றத்துடனும், இணையற்ற ஓட்டுநர் அனுபவத்துடனும், எல்எக்ஸ் 500டிவாகனத் துறையில் ஒரு புதிய தரநிலையை அமைக்க உள்ளது.
புதிய லெக்சஸ் எல்எக்ஸ் 500டி, சக்திவாய்ந்த தோற்றத்தையும் அதிநவீன வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இது, புகழ்பெற்ற ஆஃப்-ரோடு திறனை நேர்த்தியான சொகுசு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் இணைக்கிறது. சாகசத்தையும் அதிநவீனத்தையும் விரும்புவோருக்காக வடிவமைக்கப்பட்ட எல்எக்ஸ் 500டி, பல்வேறு சாலைகளில் சக்திவாய்ந்த மற்றும் உற்சாகமான வாகனம் ஓட்டும் அனுபவத்தை வழங்குகிறது. அதே நேரத்தில், அதிகபட்ச வசதி மற்றும் கட்டுப்பாட்டை உறுதி செய்கிறது. அர்பன் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஓவர்ட்ரைல் எல்எக்ஸ் 500டி என இரண்டு வேரியண்டுகளில் இது கிடைக்கிறது. இது நகரப் பயணம் முதல் வெளிப்புற சாகசங்கள் வரை பலதரப்பட்ட வாழ்க்கை முறைகளுக்கு ஏற்றது. அதன் துணிச்சலான வடிவமைப்பு, உயர் செயல்திறன் கொண்ட ட்வின்-டர்போ வி6 டீசல் எஞ்சின், அதிநவீன பாதுகாப்பு அமைப்புகள், மற்றும் மக்களுக்கான கண்டுபிடிப்புகளுடன், எல்எக்ஸ் 500டி புதிய பயணங்களை மேற்கொள்ளத் தயாராக உள்ளது.
லெக்சஸ் இந்தியாவின் தலைவர் ஹிகாரு இகேச்சி கூறுகையில், "புதிய லெக்சஸ் எல்எக்ஸ் 500டி-க்கு எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த ஆர்வமான வரவேற்புக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். இது ஒரு புதிய அளவுகோலை அமைக்கிறது. மேலும், இந்தியாவில் லெக்சஸ்க்கு இது ஒரு முக்கியமான அத்தியாயத்தைக் குறிக்கிறது. பல வழிகளில் தீர்வுகளை வழங்க வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டை வலுப்படுத்துகிறது. மேலும், எங்கள் வாடிக்கையாளர்களின் மாறிவரும் வாழ்க்கை முறைக்கு ஏற்ற பல்வேறு போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதோடு, நிலையான எதிர்காலத்தை நோக்கி நகர்கிறது. புதுமையான, கைவினைத்திறன் உணர்வால் உந்தப்பட்டு, சிறந்த தயாரிப்புகள் மற்றும் அனுபவங்களை வழங்குவதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களின் பயணத்தை மேம்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்றார்.