இந்த 2025-ஆம் ஆண்டு உலகளவில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டிய ஆண்டாக மாறியுள்ளது; 130 ஆண்டுகால வளமான வரலாற்றை கொண்டாடும் ஸ்கோடா, இந்தியாவில் அற்புதமான வகையில் 25 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. வாடிக்கையாளர்களை நெருங்குவதற்கான சரியான உத்தியை உருவாக்கி, ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் இந்திய மார்கெட்டில் அதன் ஊடுருவல் வேகத்தை அதிகரிக்க - ஒரு முக்கிய பிராண்டு, தயாரிப்பு, நெட்வொர்க் மற்றும் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட முன்முயற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய திட்ட வரைவை வெளியிட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் இயக்குனர், ஆஷிஷ் குப்தா, "ஐரோப்பாவிற்கு வெளியே ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் மிக முக்கியமான வளரும் மார்கெட்டாக இந்தியா உள்ளது. எங்களது இலட்சியத்தின் வலிமை, தொலைநோக்கு சிந்தனையின் தெளிவு மற்றும் செயல்படுத்துவதில் உள்ள முனைப்பு ஆகியவற்றின் துணையுடன் - வலுவான, மற்றும் எதிர்காலத்திற்குத் தயார் நிலையில் இருக்கும் ஒரு பிராண்டை உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். எங்கள் முனைப்பான தயாரிப்பு யுக்தியானது அதிகரித்து வரும் நுகர்வோரின் தேவைகள், மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப சிந்திக்கப்பட்டதாகும்; இது எங்கள் முன்னேற்ற பயணத்திற்கு ஒரு உந்து சக்தியாக உள்ளது. நாங்கள் வாடிக்கையாளர்களுடன் நெருக்கமான பந்தத்தை ஏற்படுத்தி வருகிறோம், எங்கள் நெட்வொர்க்கை அறிவார்ந்த முறையில் விரிவாக்கம் செய்கிறோம்; தரம், பாதுகாப்பு மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றினைக் கொண்டு எங்களது தொழில்முறை பாரம்பரியத்தை வலுப்படுத்துகிறோம். எங்களது செயல்பாடுகள் யாவும் வணிக ரீதியான விதிமுறைகளைப் பின்பற்றி இயங்குவதால், ஸ்கோடா பிராண்டை இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டை ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாக்கவுள்ளோம்,” என்று தெரிவித்தார்.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் முனைப்பான தயாரிப்பு உத்தியில் முக்கியமாக 'அனைவருக்கும் எஸ்யுவி’ என்பதும், அதன் செடான் பாரம்பரியத்தை மேம்படுத்துவதும் உள்ளடங்கும். கைலாக், குஷாக், கோடியாக் ஆகிய கார்கள் ஒவ்வொரு விதமான எஸ்யுவி விருப்பங்களை பூர்த்தி செய்வதோடு, வெவ்வேறு விலை வரம்பிலும் கிடைகின்றன; அதேவேளையில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனமானது அதன் ஸ்லேவியாவின் அடிப்படையிலான செடான் பாரம்பரியத்தினை பின்தொடர்ந்து விரைவில் ஒரு ‘குளோபல் ஐகானை’ அறிமுகப்படுத்தவுள்ளது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் 2-ஆம் மற்றும் 3-ஆம் நிலை மார்கெட்களுக்கும் அதன் இருப்பை விரிவுபடுத்தும் இலக்கினை எட்டும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இன்றளவில் 165-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள இந்த பிராண்டு, இந்த ஆண்டு 200-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யும் இலக்கினை நிர்ணயித்துள்ளது. ஸ்கோடா நிறுவனம் 2021-ஆம் ஆண்டில் ஏற்கனவே 120 வாடிக்கையாளர் டச்பாயிண்ட்களை (சேவை மையங்கள்) கொண்டிருந்தது, அவை இன்று 290-க்கும் அதிகமான எண்ணிக்கையில் வளர்ந்துள்ளது; 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் 350 டச் பாயிண்ட்களை எட்டும் நோக்கில் ஸ்கோடா உள்ளது.