புதுச்சேரி கடற்கரைகளில் தூய்மை பணிகளை தொடங்கிய கார்னியர் நிறுவனம்



 முன்னணி உலக அழகு பிராண்டான கார்னியர், தனது நிலைத்தன்மை உறுதிமொழிகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் சுவாச் பாரத் மிஷன் - அர்பன் இயக்கத்தில் இணைந்துள்ளது. இந்த ஒத்துழைப்பு, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களுக்கான மைய சேகரிப்பு புள்ளிகளாகச் செயல்படும் மிஷனின் "குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி"  மையங்களை ஆதரிக்கும். 

இந்த கூட்டாண்மை, புதுச்சேரி பகுதியில் உள்ள மூன்று இடங்களில் ராக் கடற்கரை, குருசுக்குப்பம் கடற்கரை மற்றும் கடலூர் கடற்கரை ஆகியவற்றில் தூய்மை இயக்கத்துடன் தொடங்கப்பட்டது. மேலும், இந்தியா முழுவதிலும் உள்ள 22 கடற்கரைகளிலும் இந்த இயக்கம் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது. மும்பை, சென்னை, விசாகப்பட்டினம், புரி, கோவா, மங்களூர் மற்றும் காசர்கோடு உள்ளிட்ட பல நகரங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த தூய்மை பணியில் சிறப்பாக பங்கேற்றனர்.

இது கார்னியரின் பசுமை அழகு பயணத்தில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பணியை ‘பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து கார்னியர் மேற்கொண்டு வருகிறது. 'க்ரீன் பியூட்டி' திட்டத்தின் ஒரு பகுதியாக, நிலைத்தன்மையுள்ள தீர்வுகளை உருவாக்கவும், பசுமையான எதிர்காலத்திற்காக நுகர்வோர் “ஒன் க்ரீன் ஸ்டெப்” எடுக்க ஊக்குவிக்கவும் கார்னியர் உறுதியாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஒத்துழைப்பு குறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் ஸ்வாச் பாரத் மிஷன்-நகர்ப்புறத்தின் இணைச் செயலாளரும் தேசிய மிஷன் இயக்குநருமான ரூபா மிஸ்ரா கூறுகையில், அரசின் முயற்சிகள் மற்றும் தனியார் துறைக்கு இடையிலான வலுவான ஒத்துழைப்பு மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியை இந்தக் கூட்டாண்மை எடுத்துக்காட்டுகிறது, என்றார்.

2020ஆம் ஆண்டில் இருந்து, கார்னியர் நிறுவனம், பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச் என்ற நிறுவனத்துடன் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த முயற்சி, அரவணைக்கப்படாத கழிவு சேகரிப்பாளர்கள், கழிவு மேலாண்மை தொழில்முனைவோர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கும் வகையில் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம்  சுமார் 15,000 சமூக உறுப்பினர்களின் வாழ்க்கை நேர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்த கூட்டணியின் மூலம் கார்னியர் சுமார் 900 டன்னுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் மட்டும் கார்னியர் 1000 டன் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளது.

கார்னியர் இந்தியாவின் பொது மேலாளர் அஜய் சிமா கூறுகையில், "கார்னியரில், நிலைத்தன்மை என்பது எங்கள் அனைத்து செயல்பாடுகளின் மையமாக இருக்கிறது. எங்கள் 'Green Beauty' முன்முயற்சி உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் 'சுவாச் பாரத் மிஷன் - அர்பன்' இயக்கத்துடன் எங்களது ஒத்துழைப்பு, இந்த உறுதிப்பாட்டின் முக்கியமான ஒரு பகுதியாகும். கடலுக்குச் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்து, சுற்றுச்சூழலின் மீது நேர்மறையான தாக்கத்தை உருவாக்குகிறோம்" என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form