ஆன்லைன் எஃப்டி முன்பதிவு தளமான ஸ்டேபிள் மணி ரூ.173 கோடி முதலீட்டைத் திரட்டியுள்ளது



இந்தியாவின் முதல் டிஜிட்டல் ஃபிக்ஸட் டெபாசிட் (நிரந்தர வைப்புநிதி) முதலீட்டு தளமான ஸ்டேபிள் மணி, சீரிஸ் பி நிதி திரட்டல் சுற்றில் ரூ.173 கோடியைப் பெற்றுள்ளது. இன்போசிஸின் இணை நிறுவனரும், ஆதார் ஆரக்கிடெக்ட்டுமான நந்தன் நிலேகனியான் இணைந்து நிறுவப்பட்ட ஃபண்டமென்டம் பார்ட்னர்ஷிப் நிறுவனம் இந்த முதலீட்டு சுற்றுக்கு தலைமை தாங்கியது. 

ஆதித்யா பிர்லா வென்ச்சர்ஸ் நிறுவனமும் பங்கேற்ற இதில், தற்போதுள்ள அனைத்து முதலீட்டாளர்களான இசட்47, ஆர்டிபி  குளோபல் மற்றும் லைட்ஸ்பீட் ஆகிய நிறுவனங்களும் பங்கேற்றன; இது இத்தளத்தின் தொலைநோக்கு இலக்கில் அவர்களுக்கு உள்ள வலுவான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது. இந்த நிதி ஸ்டேபிள் மணியின் மிகப்பெரிய சீரிஸ் ஏ சுற்று நடைபெற்று பத்து மாதங்களுக்குப் பிறகு நடந்துள்ளது; இது நல்லதொரு முன்னேற்றம் மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையைக் குறிக்கிறது.

ஸ்டேபிள் மணி தளமானது நிலையான வருமானத்திற்கா னமுதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது. இதில் 9.1 வரை வட்டி விகிதங்களுடன் கூடிய நிரந்தர வைப்புத் தொகைகள் (எஃப்டி), மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்கள் மற்றும் நிலையான கடன் பத்திரங்களால் (ஸ்டேபிள் பாண்டுகள்) ஆதரிக்கப்படும் பாதுகாப்பான கிரெடிட் கார்டு (ஸ்டேபிள் புரோக்கிங் பிரைவேட் லிமிடெட் மூலம் இயக்கப்படுகிறது). பயனர்கள் 200-க்கும் மேற்பட்டவங்கிகளின் எஃப்டி வட்டி விகிதங்களை ஒப்பிடலாம், 3 நிமிடங்களுக்குள் வைப்புகளை முன்பதிவு செய்யலாம், சோதனை அடிப்படையில் 7 ட்ரெயில் எஃப்டி சேவையையும் அணுகலாம், மற்றும் உடனடி வித்டிராவல் வசதியும் உள்ளது. இவை அனைத்தும் எந்தவொரு சேமிப்புக் கணக்கையும் (சேவிங்ஸ் அக்கவுண்ட்) துவங்காமலேயே பெறலாம்.

2022-இல் தொடங்கப்பட்டதில் இருந்து, ஸ்டேபிள் மணி தளம் நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களை சேர்த்துள்ளதைத் தொடர்ந்து, நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்த சொத்துக்கள் இப்போது ரூ.3,000 கோடியைத் தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில், 1.3 லட்சத்துக்கும் அதிகமான பயனர்கள் பாதுகாப்பான மற்றும் கணிக்கக் கூடிய வருமானத்திற்காக ஸ்டேபிள் மணி தளத்தை நம்புகிறார்கள்.

நிரந்தர வைப்புத் தொகைகள் இந்தியாவின் மிகவும் நம்பகமான முதலீட்டு வழியாக உள்ளன; 23 கோடிக்கும் அதிகமானோர் தற்போது எஃப்டிகளை வைத்துள்ளனர். இதற்கான மார்கெட் ஆண்டுதோறும் 12% என்ற அளவில் சீராக வளர்ந்து வருகிறது.தமிழ்நாட்டில், 1.75 கோடி நிரந்தர வைப்புநிதிக் கணக்குகள் உள்ளன, அதாவது ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி மொத்த வைப்புத்தொகைரூ. 8 லட்சம் கோடிக்கு மேலாக உள்ளது. ஆயினும்கூட, முதலீட்டு சூழல் பெரும்பாலும் ஆஃப்லைன் வடிவிலும், மற்றும் பெரிதாக பலனற்றதாகவுமே உள்ளது, இந்தியாவில் 94% எஃப்டிகள் 8%-க்கும் குறைவான வட்டியையே, பெறுகின்றன - இது மக்களின் அணுகல் தன்மை மற்றும் விழிப்புணர்வில் உள்ள பெரிய இடைவெளியைக் குறிக்கிறது. இந்த இடைவெளியைத்தான் ஸ்டேபிள் மணி தளம் நிரப்ப விளைகிறது.

இந்த இடைவெளியைக் குறைக்க, ஸ்டேபிள் மணி பல முன்னணி சிறு நிதி வங்கிகள், எம்பிஎப்சிகள் (வங்கியல்லாத நிதி நிறுவனங்கள்) மற்றும் நாட்டில் மிக அதிக எஃப்டி வட்டி விகிதங்களை வழங்கும் பிற பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. புக் செய்யப்படும் அனைத்து வைப்புத்தொகைகளும் சேமிப்புக்கணக்கைத் திறக்க வேண்டிய அவசியமின்றி, 100% டிஜிட்டல் முறையில் முன்பதிவு செய்யப்படுகின்றன; மேலும், இந்திய ரிசர்வ் வங்கிக்கு முழுவதும் சொந்தமான அதன் துணை நிறுவனமான டிஐசிஜிசியிலிருந்து ரூ.5 லட்சம் வரை, அதாவது ஒரு வங்கிக்கு ஒரு பயனருக்கு என்ற வீதத்தில் காப்பீட்டுத் தொகையையும் வழங்குகின்றது.

மேலும், ஸ்டேபிள் பாண்ட்ஸ் எனப்படும் நிலையான கடன்ப த்திரங்களை (ஸ்டேபிள் புரோக்கிங் பிரைவேட் லிமிடெட் மூலம் இயக்கப்படுகிறது) துவங்கியுள்ளதன் மூலம், முதலீட்டாளர்கள் இப்போது அதானி, முத்தூட் மற்றும் ஐஐஎப்எல்  போன்ற முன்னணி பாண்டு வழங்குநர்களிடமிருந்து செபி-யால் முறைப்படுத்தப்பட்ட குறுகிய கால மற்றும் நீண்டகால கடன் பத்திரங்களில் முதலீடுகளை பன்முகப்படுத்தலாம்; இதனை வெறும் ரூ.1,000 முதல் தொடங்கி 12% வரை வருவாய் ஈட்டலாம். உங்களது ஃபிக்ஸட் -வருமான முதலீட்டை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், ஸ்டேபிள் மணி தளமானது உங்களது நிரந்தர வைப்புத்தொகை முதலீடுகளை மிகவும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றுகிறது.a

Post a Comment

Previous Post Next Post

Contact Form