திருநெல்வேலியில் உம்மிடி பங்காரு ஜூவல்லரியின் விற்பனை கண்காட்சி

 

புதுமையான, நவீன வடிவமைப்பு மற்றும் உலகத்தரத்திலான கைவினைத் திறனுக்காக கொண்டாடப்படும் இந்தியாவின் பாரம்பரிய நிறுவனமான உம்மிடி பங்காரு ஜூவல்லரி சார்பில் இன்று தொடங்கி , மார்ச் 11-ம் தேதி வரையில் மூன்று நாள் விற்பனை கண்காட்சி திருநெல்வேலியில் நடைபெறுகிறது. திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள ஆப்பிள் ட்ரீ ஹோட்டலில் நடைபெறும். 

விற்பனை கண்காட்சியில் கைவினைத்திறன் மிக்க தங்கம், வைர நகைகளை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இந்தக் கண்காட்சியில் பல்வேறு சிறந்த நகைகளுடன் காதணிகள், நெக்லஸ், தோடு, மூக்குத்தி மற்றும் திருமணத்திற்கான நகை தொகுப்புகள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கண்காட்சி குறித்து உம்மிடி பங்காரு ஜூவல்லரியின் நிர்வாக பங்குதாரர் அமரேந்திரன் உம்மிடி கூறுகையில், திருநெல்வேலி எங்களின் நகைகளுக்கு தனிச்சிறப்பைக் கொண்ட மையமாக விளங்குகிறது. எங்களின் கலைநயமிக்க நுட்பமான தங்கம், வைர நகை விற்பனை கண்காட்சியை நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். திருநெல்வேலியில் ஏற்கனவே கண்காட்சியை நடத்தினோம். அதில் வாடிக்கையாளர்கள் பெரும் ஆதரவை வழங்கினர். அதன்பேரில் மீண்டும் திருநெல்வேலியில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். கண்காட்சியில் பிரமிக்க வைக்கும் நகை தொகுப்புகளை காண திருநெல்வேலியில் உள்ள வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்கிறோம் என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form