உயர்ந்து வரும் பெட்ரோல் விலைக்கு மத்தியில், மின்சார வாகனங்களுக்கான தேவையை பூர்த்தி செய்வதில் கவனமீர்க்கும் அல்ட்ராவைலட்

இந்தியாவில் பெட்ரோல் விலையேற்றம் தொடர்ந்து நுகர்வோருக்கு சுமையாக இருந்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள இருசக்கர வாகன வாங்குநர்களுக்கு மின்சார வாகனங்களுக்கான மாற்றத்தை எளிதாகவும், அதிக பலன் தருவதாகவும் மாற்றும் நோக்கில் அல்ட்ராவைலட் நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. வாகனங்களை வாங்குபவர்கள் அதன் ஒட்டுமொத்த பராமரிப்புச் செலவை பெருகிவரும் அளவில் கணக்கிட்டு பார்க்கும் இந்தச் சூழலில், அல்ட்ராவைலட் நிறுவனம் மின்சார வாகனங்களுக்கு மாறுவதன் பொருளாதார மற்றும் செயல்திறன் நன்மைகளை வலுப்படுத்துவதோடு, இந்த மாற்றத்தை முன்பை விட அதிக லாபகரமானதாகவும் ஆக்குகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், வாகன ஓட்டிகள் தங்களின் முந்தைய பயண வரலாறு மற்றும் வாகனப் பயன்பாட்டின் அடிப்படையில், அல்ட்ராவைலட் மோட்டார்சைக்கிளை வாங்குவதற்கு ரூ.30,000 வரை சலுகைகளைப் பெற முடியும். பெட்ரோல் வாகனங்களில் ஏற்கனவே பயணித்த கிலோமீட்டர்களை, புதிய வாகனம் வாங்குவதற்கான சலுகைகளாக மாற்றுவதன் மூலம், அல்ட்ராவைலட் நிறுவனம் மின்சார வாகனங்களின் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்றை எடுத்துக்காட்டுகிறது. அதாவது, செயல்திறன், தொழில்நுட்பம், நம்பகத்தன்மை அல்லது ஓட்டுதல் அனுபவம் ஆகியவற்றில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல், மீண்டும் மீண்டும் ஏற்படும் எரிபொருள் செலவுகளிலிருந்து இதில் முழு விடுதலை கிடைக்கிறது.

இந்த அறிவிப்பு குறித்து அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான நாராயண் சுப்பிரமணியம் கூறுகையில், "அதிகரித்து வரும் பெட்ரோல் விலை என்பது கடந்த சில காலமாகவே பரவலாக விவாதிக்கப்படும் ஒரு தலைப்பாக இருந்து வருகிறது. ஆனால், நுகர்வோர் தங்களின் எரிபொருள் சார்ந்திருப்பிலிருந்து மாறுவதற்கு நேரடியாக உதவும் நடவடிக்கைகள் மிகக் குறைவாகவே எடுக்கப்பட்டுள்ளன. மின்சார வாகனங்களை வாங்குவதை எளிதாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் மாற்றும் உறுதியான நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே மின்சார வாகனங்களுக்கான இந்த மாற்றம் ஆதரிக்கப்பட வேண்டும் என்று அல்ட்ராவைலட் நிறுவனத்தில் நாங்கள் நம்புகிறோம். இது மின்சார வாகனங்களுக்கான மாற்றத்தை விரைவுபடுத்த வேண்டும் என்ற நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள இருசக்கர வாகன வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், மிகக் குறைந்த இயக்கச் செலவு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சிறந்த வாகனப் பயன்பாட்டு அனுபவம் ஆகியவற்றைப் பெறுவதோடு, மிகுந்த தன்னம்பிக்கையுடன் இந்த மாற்றத்தை மேற்கொள்ள நாங்கள் வழிவகை செய்கிறோம். மின்சார வாகனத் துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டிகளுக்கு இந்த மாற்றத்தை எளிதானதாகவும் அதிக லாபகரமானதாகவும் மாற்றுவதன் மூலம், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை விரைவுபடுத்துவதே எங்கள் முக்கிய இலக்காகத் தொடர்கிறது" என்றார்.

தொடர்ச்சியான தயாரிப்பு கண்டுபிடிப்புகள், சில்லறை விற்பனை நிலையங்களின் விரிவாக்கம், நுகர்வோரின் அதிகரித்துவரும் ஆதரவு மற்றும் சர்வதேச சந்தைகளில் அடைந்து வரும் தொடர் முன்னேற்றம் ஆகியவற்றின் மூலம் அல்ட்ராவைலட்  நிறுவனம் இந்தியாவின் முன்னணி மின்சார வாகன பிராண்டுகளில் ஒன்றாக தனது நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இத்துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில், மேம்பட்ட தொழில்நுட்பம், சிலிர்ப்பூட்டும் செயல்திறன் மற்றும் சிறந்த வாகனப் பயன்பாட்டு மதிப்பு ஆகியவற்றை ஒருங்கே கொண்ட தயாரிப்புகளை உருவாக்குவதில் இந்நிறுவனம் தனது கவனத்தை தொடர்ந்து செலுத்தி வருகிறது.  


Post a Comment

Previous Post Next Post

Contact Form