இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், தமிழ்நாட்டில் 73 மில்லியன் டாலர் ரவுண்ட் டேபிள் தகுதி பெற்ற ஆலோசகர்களைப் பதிவு செய்துள்ளதாக பெருமையுடன் அறிவித்துள்ளது. இது நிதி ஆலோசனை சேவைகளில் சிறப்பை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. 2026 உலகளாவிய எம்டிஆர்டி தரவரிசையின்படி, விரும்பத்தக்க எம்டிஆர்டி பட்டத்தைப் பெற்றவர்களாக திருச்சிராப்பள்ளியிலிருந்து 3 ஆலோசகர்கள், நாமக்கல்லிலிருந்து 14 ஆலோசகர்கள் மற்றும் சென்னையிலிருந்து 13 ஆலோசகர்களை நிறுவனம் பதிவு செய்துள்ளது.
1397 ஆலோசகர்களில் எம்டிஆர்டி தகுதி பெற்றவர்களில் 695 பேர், அதாவது கிட்டத்தட்ட பாதிப் பேர் பெண்கள் ஆவர். இது, இந்தியாவின் நிதி ஆலோசனைத் துறையின் முன்னணியில் யார் தொழில் வாழ்க்கையை உருவாக்கி வருகின்றனர் என்பதை வெளிப்படுத்தும் ஒரு கட்டமைப்பு ரீதியிலான அறிகுறியாகும். மேலும், உண்மையான ஆலோசகர் சூழலை உருவாக்குவதற்கான டாடா ஏஐஏ-வின் உறுதிப்பாட்டையும் இது பிரதிபலிக்கிறது. ஐந்து முதல் ஒன்பது ஆண்டுகள் எம்டிஆர்டி தகுதியைப் பெற்ற ஆலோசகர்கள் பிரிவில் 207 ஆலோசகர்களுடன் இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்தத் தரவரிசை, நுகர்வோரின் கனவுகளைப் பாதுகாக்க வழிகாட்டும் முழுநேர தொழில்முறை ஆலோசகர்களை உருவாக்குவதிலும், நுகர்வோரைப் பற்றிய ஆழமான புரிதல், தொழில்முறை நெறிமுறைகள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆலோசகர் சமூகத்தை கட்டியெழுப்புவதிலும் டாடா ஏஐஏ-வின் கவனத்தை எடுத்துக்காட்டுகிறது.மில்லியன் டாலர் ரவுண்ட் டேபிள் (எம்டிஆர்டி) என்பது ஆயுள் காப்பீடு மற்றும் நிதிச் சேவைகள் துறையில் சிறப்பிற்கான உலகளாவிய தரச்சான்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எம்டிஆர்டி ஆலோசகர்கள் தொழில்முறை அறிவு, நெறிமுறை சார்ந்த செயல்பாடு, உற்பத்தித்திறன் மற்றும் உயர்தர வாடிக்கையாளர் சேவையை வழங்குவார்கள். எம்டிஆர்டி தகுதி பெற்ற ஆலோசகர்கள், நுகர்வோர் தங்களின் தேவைகளை மதிப்பீடு செய்து, நம்பிக்கையுடன் நிதி தொடர்பான முடிவுகளை எடுக்க உதவுகின்றனர்.டாடா ஏஐஏ-வின் ஆரா தளத்தின் மூலம், அதன் ஆலோசகர்கள் கட்டமைக்கப்பட்ட கற்றல், வழிகாட்டுதல் தொடர்ச்சியான திறன் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் ஆதரவு ஆகியவற்றின் மூலம் உயர்திறன் கொண்ட நிபுணர்களாக உருவாக்கப்படுகின்றனர்.
டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸின் ப்ரொப்ரைட்டரி பிசினஸ் பிரிவின் தலைமை விநியோக அதிகாரி ராகேஷ் ஷர்மா கூறுகையில்: “இந்தியாவில் எம்டிஆர்டி தகுதி பெற்ற ஆலோசகர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக முதலிடத்தைப் பெற்றிருப்பது எங்களுக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. இந்த அங்கீகாரம், எங்கள் ஆலோசகர்களின் தரம், தொடர்ச்சியான செயல்திறன் மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. தொடர்ந்து எம்டிஆர்டி உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கும், ஐந்து முதல் ஒன்பது ஆண்டுகள் எம்டிஆர்டி தகுதியைப் பெற்ற ஆலோசகர்களுக்கும் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் மிகவும் ஊக்கமளிக்கிறது” என்றார்.
.png)