இந்தியாவின் முன்னணி சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட், முதலீட்டாளர்களுக்கு நிலைத்தன்மை, முன்கணிப்பு மற்றும் வரி செயல்திறன் ஆகியவற்றின் ஒரு கலவையை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு புதுமையான திறந்த-நிலை திட்டமான ஆக்சிஸ் இன்கம் பிளஸ் ஆர்பிட்ரேஜ் பேஸிவ் எப்ஓஎப் இன் அறிமுகத்தை அறிவித்துள்ளது.
இந்த புதிய நிதி வழங்கல் (என்எப்ஓ) அக்டோபர் 28, 2025 அன்று சந்தாவிற்குத் தொடங்கி நவம்பர் 11, 2025 அன்று முடிவடையும். இந்த நிதியானது தேவங் ஷா (தலைவர் - நிலையான வருமானம்), ஆதித்யா பகாரியா (மூத்த நிதி மேலாளர்), ஹர்திக் சத்ரா (மூத்த நிதி மேலாளர்) மற்றும் கார்த்திக் குமார் (நிதி மேலாளர்) ஆகியோரால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்தப் புதிய வழங்கல், ஒரு எச்சரிக்கையான ஆபத்து விவரக்குறிப்பைக் பராமரிக்கின்ற அதே வேளையில் வரிக்குப் பிந்தைய வருமானத்தை மேம்படுத்த விரும்பும் முதலீட்டாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நடுத்தர கால எல்லைக்குள் நிலையான வருமானத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கலப்பின கட்டமைப்பை உருவாக்குகின்ற இந்த நிதி, முதலீடுகளை ஆர்பிட்ரேஜ் நிதிகளுடன் செயலற்ற கடன் சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் மூலோபாய ரீதியாக ஒருங்கிணைக்கிறது.
ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பி.கோப்குமார், இந்த ஃபண்ட் வெளியீடு குறித்து கருத்து தெரிவிக்கையில், “ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்டில், செயல்திறனை எளிமையுடன் இணைக்கும், முதலீட்டாளர்-மைய்யப்படுத்திய புதுமையான தீர்வுகளை வழங்குவதில் எங்கள் கவனம் எப்போதும் இருந்து வருகிறது. நிலைத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் வரி செயல்திறன் ஆகியவற்றின் தனித்துவமான ஒரு கலவையை வழங்குகின்ற ஆக்சிஸ் இன்கம் பிளஸ் ஆர்பிட்ரேஜ் பேஸிவ் எப்ஓஎப் இந்த தத்துவத்திற்கு ஒரு சான்றாக உள்ளது. முன்கணிப்பு மற்றும் வரிக்குப் பிந்தைய வருவாய் ஆகியவற்றை எப்போதையும் விட முக்கியப்படுத்துகின்ற இந்தச் சந்தையில், நிலையான வருமான முதலீட்டை அணுகும் ஒரு அறிவார்ந்த வழியுடன் முதலீட்டாளர்களுக்கு அதிகாரம் வழங்குவதே இந்த நிதியின் நோக்கமாகும்” என்று கூறினார்.
உயர்தர கருவிகளை இலக்காகக் கொண்ட இந்த திட்டம், அதன் போர்ட்ஃபோலியோவில் தோராயமாக 50 முதல் 65% ஐ செயலற்ற கடன் சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்ய கட்டமைக்கப்பட்டுள்ளது. வட்டி விகித அபாயத்தைக் குறைக்கின்ற அதே வேளையில் திரட்டப்பட்ட வருமானத்திலிருந்து பயனடைய முதலீட்டாளர்கள் அனுமதிக்கின்ற இந்த அடிப்படைத் திட்டங்கள் ஒரு ரோல்-டவுன் உத்தியைப் பின்பற்றும். மீதமுள்ள 35-50% போர்ட்ஃபோலியோ, முழுமையாக இழப்புகாப்பரண் செய்யப்பட்ட பங்கு நிலைகளை உள்ளடக்கிய ஆர்பிட்ரேஜ் நிதிகளுக்க ஒதுக்கப்படும். இந்த கூறு, திசை சந்தை விளைவைத் தவிர்ப்பதால், குறைந்த ஏற்ற இறக்கத்துடன் வருவாயை ஈட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கூறுகளின் கலவையானது, மேம்படுத்தப்பட்ட வரி சாதகத்துடன் கடன்-போன்ற வருவாயை இந்த நிதி வழங்குவதை உறுதி செய்கிறது.