ஜேஇஇ அட்வான்ஸ்டு 2025 தேர்வில் வேதாந்து மாணவன் சாதனை

 


2025 - ஜேஇஇ தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதில் இந்தியாவின் முன்னணி கல்வி தளமான விளங்கும் வேதாந்து, ஜேஇஇ அட்வான்ஸ்டு 2025 தேர்வில் அதன்  மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளதை பெருமையுடன் அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் தரவரிசைப் பட்டியலில் சிறந்தஇடங்களைப் பெறுவது, மற்றும் நல்ல ரிசல்ட்களை நிலையாக தொடர்ந்து பெற்றுவரும் வேதாந்து நிறுவனம், இந்த ஆண்டும்அதன் வெற்றியைத் தொடர்ந்துள்ளது. அதன் உயர்தரமான, தனிப்பயனாக்கப்பட்டமற்றும் நல்ல மதிப்பெண் பெறுவதில் கவனம் செலுத்தும் ஒரு கல்வி முறைக்கு இது ஒரு சான்றாக உள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த தக்‌ஷ் தயாலியாஎன்கிற மாணவர்அகில இந்திய அளவில் 15-வது இடத்தைப் (ரேங்க்) பெற்றுள்ளதோடு, கணிதத்தில் முழுமையாக120 மதிப்பெண்களைப் பெற்று, மதிப்பெண் பட்டியலில் கர்நாடக மாநிலத்தில் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளார். வேதாந்துவின் 3 ஆண்டு லாங்க் டெர்ம் பேட்ச் மாணவரான தக்‌ஷின் தளராத ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் தேர்வுக்கு தயாராகும் செயல்பாட்டில் அவர் கொண்டிருந்த நம்பிக்கை ஆகியவை நிஜமாக ஊக்கமளிப்பதாக அமைந்து, பலனளித்துள்ளது. லாங்க்  டெர்ம் பேட்ச்சின் மற்றொரு மாணவரான கோரக்பூரைச் சேர்ந்த பிரகார் சிங், இந்தியளவில் 92-வது இடத்தைப் பெற்று வேதாந்து குடும்பத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். வேதாந்துவின், முழுக்கவனத்துடன் மேற்கொள்ளும் பிரயத்தனங்கள், அயராத முயற்சி,  மற்றும் நிபுணர் வழிகாட்டுதல் ஆகியவற்றின் பலனாக இந்த நல்ல மதிப்பெண்கள் சாத்தியமாயின.

ஒரு சில மாணவர்கள் மட்டும் இது போன்ற சாதனைகளை புரியவில்லை. வேதாந்து மாணவர்கள் இத்தேர்விலும் சிறந்த மற்றும் நிலையான செயல்திறனை வெளிப்படுத்தி நிரூபித்துக் காட்டியுள்ளனர்; தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் 8 மாணவர்களும், முதல் 500 இடங்களுக்குள் 20 மாணவர்களும், மற்றும் முதல் 5,000 இடங்களுக்குள் 83 மாணவர்களும் வந்துள்ளனர். இது மாணவர்களுக்கேற்ப பிரத்தியேகப்படுத்திய மற்றும் மதிப்பெண்களை நோக்கிய வேதாந்துவின் கற்றல் முறைக்குக் கிடைத்த வெற்றியாகும், என்று வேதாந்துவின், இணை நிறுவனர், மற்றும் அகாடமிக்ஸ் துறையின் ஹெட் ஆனந்த் பிரகாஷ் தெரிவித்துள்ளர்.

வேதாந்து நிறுவனத்தின், இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அலுவலருமான வம்சி கிருஷ்ணா கூறுகையில், "இந்த தேர்வு முடிவுகள் வெறும் எண்கள் மாத்திரம் கிடையாது, அதற்கும் மேலானவை - அவை நீண்டகாலமாக நாங்கள் உருவாக்கிய நம்பிக்கை மற்றும் திறமையை வெளிக்கொணர்ந்ததன் பிரதிபலிப்பாகும். மிக சிறந்த முறையில் மாணவர்களின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, அவர்கள் திறனை வெளிக்கொண்டு வருவதில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை உள்ளது - முதலில் ஆன்லைனில் இதனை நிரூபித்து காட்டினோம்; இப்போது எங்கள் கல்வி மையங்களிலும் (லேர்னிங் சென்டர்களிலும் விஎல்சி) இதனை சாத்தியப்படுத்தியுள்ளோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form