சென்னையில் உள்ள எம்ஐசி-யில் ஜூன் 6 முதல் 8 வரை தேதிகளில் நடைபெறும் 2025 இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்பில் தேசிய சாம்பியன்ஷிப் ப்ரோ ஸ்டாக் 200 பிரிவிற்கான அதிகாரப்பூர்வ ரேஸ் இயந்திரங்களை வழங்கும் நிறுவனமாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதன் மூலம், இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் வரலாற்றில் முதல் முறையாக, தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிக்கு ரேஸில் கலந்து கொள்ளும் சுயாதீன அணிகள் மற்றும் பந்தய வீரர்களுக்கு ரேஸ் ட்யூன் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்களை வடிவமைத்து, அவற்றை உருவாக்கி, வழங்கும் ஒரு ப்ராண்ட்டாக புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்.
இது டிவிஎஸ் மோட்டார் நிறூவனம் மோட்டார் பந்தய களத்தில் பெற்றிருக்கும் தலைமைத்துவத்தையும், மோட்டார் பந்தய நிபுணத்துவத்தில் காட்டிவரும் அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க அங்கீகாரம், இரு சக்கர வாகன பந்தயத்தை தனிப்பட்ட மோட்டார் பந்தய வீரர்களும் கொள்ளும் வகையில் ஜனநாயகப்படுத்த வழி வகுத்திருக்கிறது. மேலும் சுயாதீன பந்தய வீரர்கள் எளிதில் பங்கேற்கவும், அவர்களுக்கு பெரும் பொருட்செலவில்லாமல் திறன் பெற்ற மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தவும் இது உதவும்.
மோட்டார் பந்தயத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய வடிவத்தின் ஒரு பகுதியாக, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ரேஸ்-டியூன் செய்யப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஜிபி200ஆர் மோட்டார் சைக்கிள்களை தன்னிச்சையாக போட்டியிடும் அணிகளுக்கு வழங்கும். அந்த அணிகள் இந்த சாம்பியன்ஷிப் வகுப்பில் போட்டியிட தங்களது பந்தய வீரர்களை களத்தில் இறக்குவார்கள். மேலும், பெட்ரோனாஸ் டிவிஎஸ் ரேசிங் குழு இந்த சீசன் முழுவதும் உச்சப்பட்ச செயல்திறனை உறுதி செய்யும் வகையில், முழுமையான தொழில்நுட்ப ஆதரவையும், இயந்திர சேவை மற்றும் பராமரிப்பையும் இந்த அணிகளுக்கு வழங்கும்.
டிவிஎஸ் அப்பாச்சியின் 20 ஆண்டுகால பந்தய பாரம்பரியத்துடன், இந்த மைல்கல்லானது இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸில் அடுத்தக்கட்டத்தைக் குறிக்கிறது. பங்கேற்கும் அணிகள் மற்றும் பந்தய வீரர்களுக்கான தேர்வு செயல்முறை சமீபத்தில் மே 28, 2025 அன்று மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த விறுவிறுப்பான பந்தயப் பிரிவிற்கு ஏழு அணிகள் மற்றும் பன்னிரண்டு பந்தய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், என்று டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ப்ரீமியம் பிஸினெஸ் பிரிவின் தலைவர் விமல் சம்ப்லி தெரிவித்துள்ளார்.