தமிழ்நாடு அரசுடன் இணைந்து சூரிய சக்தி திறன் மையங்களை தொடங்கு டாடா பவர்



டாடா பவர் நிறுவனம் தனது திறன் மேம்பாட்டுப் பிரிவான டாடா பவர் திறன் மேம்பாட்டு நிறுவனம் மூலம், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகத்துடன் இணைந்து மாநிலம் முழுவதும் சூரிய சக்தி திறன் மையங்களை நிறுவியுள்ளது. புதியதொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த கூட்டு செயல்பாடானது, பேட்டை, தூத்துக்குடி, சாத்தூர் மற்றும் விருதுநகரில் உள்ள நான்கு அரசு ஐடிஐ-களில் சூரிய சக்தி திறன் மையங்களை தொடங்குவதற்கு வழிவகுக்கும்.

 இந்த மையங்கள் சூரிய ஆற்றல் மற்றும் இது தொடர்புடைய காற்று மற்றும் க்ரீன் ஹைட்ரஜன் போன்ற துறைகளில் பயிற்சி அளிக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இருக்கும் வேலைவாய்ப்புக்களுக்கு அவசியமான மற்றும் முக்கிய திறன்களை இளைய தலைமுறையினருக்கும் வழங்குவதோடு, மின் சக்தி துறையில் நீடித்து நிலைக்கத்தக்க சூழலை உருவாக்குவதே இந்த கூட்டு செயல்பாட்டின் முக்கிய நோக்கமாகும்.

இந்த கூட்டு செயல்பாட்டின் ஒரு பகுதியாக, டாடா பவர் திறன் மைய பயிற்சிக்கான பாடத்திட்ட உருவாக்கம், பயிற்சி வழங்கல் மற்றும் மதிப்பீடுகளை முன்னெடுக்கும். அதே நேரத்தில் தமிழ்நாடு அரசின் டெட் தனது ஐடிஐ நெட்வொர்க் மூலம் உள்கட்டமைப்பு மற்றும் இளைய தலைமுறையினரைச் சென்றடைவதற்கு ஆதரவளிக்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், டி.பி.எஸ்.டி.ஐ.யின் தலைவர் அலோக் பிரசாத் மற்றும் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநர் பி.விஷ்ணுசந்திரன், ஐ.ஏ.எஸ். ஆகிய இருவரும் டி.இ.டி.யின் கூடுதல் இயக்குநர்  டி. ராஜசேகர் மற்றும் டாடா பவர் நிறுவனத்தின் ஆலோசகர் ஜே.சி. மிஸ்திரிஆகியோர் முன்னிலையில் கையெழுத்திட்டனர். 

இந்த கூட்டு செயல்பாடு திறன் மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டை ஒருங்கிணைந்து செயல்படுத்துவதை பிரதிபலிக்கிறது. மேலும் அதிக வாய்ப்புகளுடன் இருக்கும் தமிழ்நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளையும்  ஆதரிக்கும் வகையில் இது அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. டி.இ.டி.யின் மையங்களைத் தொடங்குவதற்கேற்ற புதிய இடங்களை அடையாளம் காண்பதன் அடிப்படையில், எதிர்காலத்தில் கூடுதல் மையங்கள் இம்முயற்சியில் சேர்க்கப்படலாம்.

"டாடா பவர் திறன் மேம்பாட்டி பிரிவு மூலம், இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மற்றும் திறன் மேம்பாட்டு இலக்குகளுடன் ஒத்திசைந்துப்போகும் வகையில் திறமையான பசுமைப் பணியாளர்களை உருவாக்குவதில் நாங்கள் முன்னணியில் உள்ளோம். தமிழ்நாடு அரசாங்கத்துடனான எங்கள் கூட்டு செயல்பாட்டை  முன்னெடுப்பதன் மூலம்,  அனைத்து தரப்பினரையும், அம்சங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாற்றத்தை ஆதரிப்பதற்கும் இணைந்து செயல்பட இருக்கிறோம். மேலும், நாடு முழுவதும் தொடர்ந்து இது போன்ற கூட்டு செயல்பாடுகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம்," என்று டாடா பவர் நிறுவனத்தின் நிலைத்தன்மை மற்றும் சிஎஸ்ஆர் தலைவர் ஹிமால் திவாரி கூறினார்.

அரசு அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்து, தொழில்துறை நுண்ணறிவுகளைப் பயன்படுத்துவதன் மூலம், டாடா பவர் தொடர்ந்து தூய்மையான எரிசக்தித் துறையில் திறன் இடைவெளியைக் குறைத்து, சமூகங்கள் நிலையான வளர்ச்சியை நோக்கிய மாற்றத்தில் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்க உதவுகிறது.

டாடா பவர், ஒரே ஆலையில் அதிகளவில் மின் சக்தியை உற்பத்தி செய்யும் இந்தியாவின் மிகப்பெரிய சிங்கிள்  லொகேஷன் ஆலையில் 4.3 ஜிகாவாட் சோலார் செல் மற்றும் 4.3 ஜிகாவாட் மாட்யூல் உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் இயக்கி வருகிறது. இந்த ஆலையில் 80 சதவீத பெண் ஆபரேட்டர்கள் உள்ளனர், இது இளைய தலைமுறையினரிடையே அனைவருக்குமான வளர்ச்சி மற்றும் பசுமைத் திறன் மேம்பாடு ஆகிய இரண்டு அம்சங்களிலும் டாடா பவர் நிறுவனம் காட்டிவரும் அர்ப்பணிப்புக்கு  சான்றாக அமைந்திருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form