டாட்டாவின் பெருமை மிகு தயாரிப்பான தநைரா சேலத்தில் 40 சதவீதம் வரை தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. முதல் முறையாக நாடு தழுவிய அளவில் சிறப்பு விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புடவைகள், அணியத் தயாராக உள்ள ஆடைகள், தைக்கப்படாத குர்தா செட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அணியும் லெஹங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளிலான தயாரிப்புகளுக்கு 40% வரை தள்ளுபடியை வழங்குகிறது. தநைராவில் ஏராளமாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் ஆடைகள் அனைத்தும் தூய மற்றும் இயற்கையான அசல் துணி வகைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில், சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தநைராவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. பண்டிகைக் காலம் தொடங்க இருக்கையில், அதாவது சீசனுக்கும் முன்னதாகவே, இந்த விற்பனை சீசனின் அறிமுகத்தை அறிவித்திருக்கிறது.
இந்த நிகழ்வில் பேசிய கஸ்டமர் எக்ஸ்பீரியன்ஸ் பிரிவின் தலைவர் ஜஸ்வந்த் தாமஸ், "பல்வேறு வகைகளிலான, ஏராளமான தயாரிப்புகளுக்கு இப்படியொரு மாபெரும் தள்ளுபடிகளை நாங்கள் வழங்குவது இதுவே முதல் முறை. தநைராவின் தயாரிப்புகளுக்கு 40% வரை தள்ளுபடி சலுகை வழங்கப்படுகின்றன. தநைரா என்ற ப்ராண்ட்டுக்கே உரிய, அழகியலுடன் கூடிய செழுமை மற்றும் தூய்மையை வாடிக்கையாளர்கள் கொண்டாடும் அதே தருணத்தில் இந்தச் சலுகை கூடுதல் பலன்களாக இருக்கும் வகையில் வழங்குகிறோம். இந்த விற்பனை அனுபவம் மூலமாக எங்களது வாடிக்கையாளர்களுக்கு உண்மையிலேயே சிறப்பான ஷாப்பிங் அனுபவமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம்." என்றார்.
பனாரசி, காஞ்சீவரம், ஜம்தானி முதல் டஸ்ஸர் வரை, தநைரா வழங்கும் இந்த சலுகைகள் இந்தியாவின் நெசவு மரபுகளைப் பாதுகாக்கும் கைவினைஞர்களுக்கு ஒரு சமர்ப்பணம். ஒவ்வொரு தநைரா விற்பனை நிலையமும் புடவை பிரியர்களுக்கான சொர்க்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமண ஷாப்பிங்கை உற்சாகத்துடன் மேற்கொள்ள அதற்கென தனி பகுதி, பண்டிகை கால உடைகளுக்கான சிறப்பு வரிசை மற்றும் அன்றாடம் நாம் அணியும் ஆடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என இவையனைத்தையும் ஒரே குடையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு தநைரா வழங்குகிறது. சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள தநைரா விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர்கள் இச்சலுகையைப் பெறலாம்.
பேட்டியின்போது தநைரா சேலம் உரிமையாளர்கள் செந்தில்குமார், விபின் பாலாஜி, மஞ்சரி ஆகியோர் உடனிருந்தனர்.