புதிய சகாப்தம். புதிய யுக்தி: மக்களை மையமாகக் கொண்ட விளம்பரப் பிரச்சாரங்கள் மற்றும் ஒரு 'பிராண்ட் சூப்பர் ஸ்டார்' மூலம் இந்தியாவில் புதிய மார்கெட்களுக்குள் முன்னோக்கி செல்வதற்காக ஸ்கோடா பிராண்டு இந்த புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது.
இலட்சிய சிந்தனை, மகிழ்ச்சியின் மீதான நாட்டம், மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றிலிருந்து உத்வேகம் பெறும் ஸ்கோடா கார்கள், பாலிவுட்டின் பவர்ஹவுஸ் எனப்படும் ரன்வீர் சிங்கிற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.
அதன் முதல் சப்-4-மீட்டர் எஸ்யுவி காரை அறிமுகப்படுத்திய உடனேயே, ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் மற்றொரு சாதனை மைல்கல்லை எட்டியுள்ளது; பாலிவுட்டின் பவர்ஹவுஸ் நடிகரான ரன்வீர் சிங்கை அதன் முதல் 'பிராண்ட் சூப்பர்ஸ்டாராக' அறிவித்துள்ளது. இந்த கூட்டணியின் பலனாக ஸ்கோடாவின் சிக்நேச்சர் ஸ்டைலுடன், மக்களை முன்னிறுத்தி நடத்தப்படும் விளம்பரங்களில் இனி ஸ்கோடாவின் ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்காக ரன்வீர் சிங் இடம்பெறுவார்.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் இயக்குனரான பீட்டர் ஜனேபா அவர்கள் இந்த கூட்டணி குறித்து பேசுகையில், "கைலாக் கார் அறிமுகம் செய்யப்பட்ட போது, 'பிக்சர் அபி பாகி ஹை' (இனி தான் ஆரம்பம்) என்று நான் உறுதியளித்தேன். இந்தியாவில் ஸ்கோடாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் இந்த வேளையில், உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்தற்கு அப்பால், ஒரு புதிய சகாப்தத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களுடனான எங்களது ஈடுபாடு உட்பட எங்கள் வணிகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் மறுசீரமைப்பதைச் சுற்றியே நாங்கள் செயல்படுகிறோம். உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியாவில், கார்கள் மற்றும் திரைப்படங்கள் ஈடிணையற்ற உணர்வுகளை உருவாக்குவதோடு, மக்களையும் ஒன்றிணைக்கின்றன. எனவே இந்திய வரலாற்றில் முதன்முறையாக, ரன்வீர் சிங் அவர்களை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் முதல் 'பிராண்ட் சூப்பர்ஸ்டார்' என்று அறிவிப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். திரையிலும், நிஜத்திலும் திறமை மற்றும் ஆற்றலின் பவர்ஹவுஸாக உள்ள ரன்வீரின் ஆளுமை - ஸ்கோடாவின் ஆவலையும் நெறிமுறைகளையும் ஒத்துள்ளது. உலகளவில் 130-வது ஆண்டை கொண்டாடும் நேரத்தில், இந்த அறிவிப்பினை நாங்கள் வெளியிடுகிறோம். இந்த கூட்டணியானது எங்களது - தயாரிப்புகள், நெட்வொர்க் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் நிறைய நற்பலன்களைக் கொண்டு வரப்போகிறது; ஏனெனில் ஐரோப்பாவிற்கு வெளியே ஸ்கோடாவின் மிக முக்கியமான சந்தையாக இங்கு எங்கள் இடத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளோம்”, என்று கூறினார்.
ஸ்கோடா பிராண்டின் சூப்பர் ஸ்டார் ரன்பீர் சிங் இடம்பெறும் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் முதல் பிளாக்பஸ்டர் படைப்பு விரைவில் வெளியாகவுள்ளது; இதில் ரன்வீர் சிங், கைலாக் காருடன் நடிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து மார்ச் மாத இறுதியில் ஸ்கோடா பிராண்டை மையமாகக் கொண்ட ஒரு படத்தை உருவாக்கும் திட்டமும் உள்ளது; இதன் மூலம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ரன்வீர் சிங் மற்றும் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாகத்தினரை சந்திக்கும் வாய்ப்பினைப் பெறலாம்.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் முதல் பிராண்ட் சூப்பர் ஸ்டாரான ரன்வீர் சிங் அவர்கள் இதுபற்றி கூறுகையில், "ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் முதல் பிராண்ட் சூப்பர் ஸ்டாராக இருப்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இந்த கூட்டணியானது தலைசிறந்த படைப்புகளை வழங்கவதில் எங்களுக்கு இடையே உள்ள பகிரப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வைப் பிரதிபலிக்கிறது; மேலும் இதன் மூலம் இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ பிராண்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதையும் நான் எதிர்நோக்கியுள்ளேன். ஸ்கோடா ஆட்டோ பிராண்டு தனித்துவமான மற்றும் அற்புதமான தயாரிப்பு போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது; இதன் காரணமாக வாகன பிரியர்களுக்கும், இந்தியாவின் வளர்ந்து வரும் மார்கெட்டில் உள்ள அதிகளவிலான வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. ஒரு வலுவான வாகனப் பாரம்பரிய பின்னணியுடன், மிகச்சிறந்த தயாரிப்பு ரகங்களுடன், ஸ்கோடா பிராண்ட் வாகனத் துறையில் உயரிய தரநிலைகளைத் தொடர்ந்து நிர்ணயித்து வருகிறது,” என்று தெரிவித்தார்.