எஸ்ஹெச்வி எனர்ஜி சேமிப்பு முனைய கொள்ளளவு அதிகரிப்பு



எஸ்ஹெச்வி எனர்ஜி நிறுவனம், சிங்கப்பூரை அடித்தளமாக கொண்டு இயங்கும் அதன் வர்த்தக செயல்பாட்டுப் பிரிவான எஸ் அண்ட் ஆர்எம் (சப்ளை அண்ட் ரீசர்ச் மேனேஜ்மெண்ட்) வழியாக இந்தியாவின் தூத்துக்குடி நகரில் அமைந்திருக்கும் அதன் கிரையோஜெனிக் எல்பிஜி (திரவ நிலை பெட்ரோலிய வாயு) சேமிப்பு முனைய கொள்ளளவு வசதியை விரிவுபடுத்தியிருக்கிறது.  இந்த விரிவாக்கம், முதன்மையாக எஸ்ஹெச்வி எனர்ஜியின் இந்திய துணை நிறுவனமான சூப்பர்கேஸ் மூலம் இந்திய சந்தைக்கு எல்பிஜி விநியோகத்தை உறுதி செய்கிறது.


தூத்துக்குடி துறைமுகத்தில் அமைந்திருக்கும் இந்த எல்பிஜி சேமிப்பு முனையத்தின் கொள்ளளவு திறன் தற்போதைய 8500 மெட்ரிக் டன்னிலிருந்து, 38500 மெட்ரிக் டன்களாக விரிவுபடுத்தப்படுகிறது.  இந்திய ரூபாயில் 500 கோடி ரூபாய் முதலீடு இதற்காக செய்யப்படும்.  இந்த முனையத்தின் விரிவாக்க செயல்பாடு, எஸ்ஹெச்வி எனர்ஜி - ன் தலைமை செயலாக்க அதிகாரி  பிராம் கிராபெர், சூப்பர்கேஸ் நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரி சாந்தனு குஹா ஆகியோர் முன்னிலையில் நவம்பர் 17 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.  

எல்பிஜி முனைய திறன் விரிவாக்கம் குறித்து ஊடகத்தினரிடம் பேசிய எஸ்ஹெச்வி எனர்ஜி - ன் தலைமை செயலாக்க அதிகாரி  பிராம் “தமிழ்நாட்டிலுள்ள எமது வாடிக்கையாளர்கள் எல்பிஜிக்கு கட்டுபடியாகக்கூடியவாறு எளிதான அணுகுவசதியை பெறுவதை உறுதிசெய்வதே இந்த எல்பிஜி சேமிப்பு முனையத்தின் கொள்ளளவு திறனை விரிவாக்கம் செய்வதற்கான எமது நோக்கமாகும்.  அரசு மற்றும் பொதுத்துறையில் செயல்படுகின்ற எண்ணெய் நிறுவனங்களுக்கு அவர்களுக்குத் தேவைப்படுகின்ற எல்பிஜி மற்றும் சேமிப்பு வசதிகள் ஆகிய இரண்டையும் வழங்குவதற்கு இந்த விரிவாக்கப் பணி எங்களை அனுமதிக்கும். இதன்மூலம் இந்தியாவில் ஒட்டுமொத்த எல்பிஜி செயல்பாடுகள் வலுப்படுத்தப்படும் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் வசதிகள் திறம்பட மேம்படுத்தப்படும்” என்றார்.

“தற்போது இருந்து வரும் பிற மாற்று எரிபொருட்களை விட அதிக தூய்மையான எரிபொருளாக எல்பிஜி திகழ்கிறது; அதுமட்டுமின்றி, இந்தியாவில் அதிக அணுகுவசதி திறன் கொண்டதாகவும் இது இருக்கிறது.  இயற்கை எரிவாயு சென்றடைய முடியாத இடங்களுக்கும் எல்பிஜியை அதிக எளிதாக கொண்டுசெல் முடியும்” என்று சூப்பர்கேஸ்  - ன் தலைமை செயலாக்க அதிகாரி  சாந்தனு குஹா குறிப்பிட்டார்.  

Post a Comment

Previous Post Next Post

Contact Form