ராமேஸ்வரத்தில் மொராரி பாபு சொற்பொழிவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு



மதிப்புமிக்க ராமகதை சொற்பொழிவாளர் பூஜ்ய மொராரி பாபுவின் வழிகாட்டுதலில் நடத்தப்பட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க ராம யாத்திரை, ராமேஸ்வரத்தின் புனிதமான கடற்கரையை வந்து அடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்களை அவரது ராமகதையை கேட்டனர். ராமாயணத்தில், ராமேஸ்வரம் புனிதத்தின் ஒரு கலங்கரை விளக்கமாக நிற்கிறது. அங்கு ராவணனின் பிடியிலிருந்து சீதையை விடுவிக்கவும் ராம் சேதுவைக் கட்டுவதற்கு முன்பு தெய்வீக பலத்தை நாடியும் ராமர் ராமநாதசுவாமி கோயிலில் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தார்.

 இதை எதிரொலிக்கும் வகையில், பூஜ்ய மொராரி பாபு ராமநாதசுவாமி கோயிலில் சிவபெருமானின் ஆசி வேண்டி கடவுளை தரிசித்தார். பாபுவின் இதயப்பூர்வமான கதை மூலம், ராமர் மற்றும் சிவ தத்துவத்தின் தடையற்ற ஒற்றுமையை வெளிச்சம் போட்டுக் காட்டினார். இது தெய்வீகத்தை ஒரு தனித்துவமான, எல்லையற்ற சாரமாக உணர பக்தர்களை வலியுறுத்தியது.

தமிழ்நாட்டிற்கு வந்த இந்த புனித யாத்திரை, புருஷோத்தமரான ராமரின் புனிதப் பாதையை மீண்டும் எடுத்துச் செல்லும் 11 நாள் பயணத்தில் ஒரு பிரகாசமான அத்தியாயத்தை சேர்க்கிறது.இந்தியா மற்றும் இலங்கை என 8,000 கிலோமீட்டர்களை சுற்றும் இந்த அசாதாரண பயணத்தில், இந்தியா மற்றும் அதற்கு அப்பால் இருந்து 411 யாத்ரீகர்களைக் கொண்ட அர்ப்பணிப்புள்ள குழு, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 22 பெட்டிகள் கொண்ட ரயிலில் பாபுவுடன் பயணிக்கிறது. ராமேஸ்வரம் கதா என்பது புனித தலங்களில் நடைபெறும் ஒன்பது சொற்பொழிவுகளில் ஒன்றாகும், இதில் அனைத்து பின்னணியிலிருந்தும் மக்கள் பங்கேற்று ராமசரிதத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

பங்கேற்பாளர்களை வரவேற்க பரந்த பந்தல்கள் அமைக்கப்பட்டன. பாரம்பரியத்திற்கு இணங்க, பந்தாரா (சமூக உணவுகள்) ஏற்பாடு செய்யப்பட்டன. நல்லிணக்கம் மற்றும் சேவையின் அடையாளமாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கதாவில் பேசிய பூஜ்ய மொராரி பாபு, “நமது பாரம்பரியத்தில் பல புனித இருக்கைகள் உள்ளன. ஆனால் இன்று உலகிற்கு சத்பாவத்தின் இருக்கை தேவை - நல்லெண்ணம், இரக்கம் மற்றும் ஒற்றுமை. குரு ஒரு  சீடனுக்கு அவனது வாழ்க்கையின் தொடக்கத்திலும் முடிவிலும் உடன் இருப்பார். இடைப்பட்ட பயணத்தை அவர் அந்த சீடனின் விருப்பத்திற்கு விட்டுவிடுகிறார். வாழ்க்கையில் எதையாவது விட்டுவிடவோ அல்லது விட்டுக்கொடுக்கவோ கற்றுக்கொள்ளும்போதுதான் அமைதி வரும்.... பக்தியை ஒரே வார்த்தையில் சுருக்கமாகக் கூறினால், அது நம்பிக்கை - ஏனென்றால் உண்மையான பஜனை என்பது பரிபூரணமான நம்பிக்கை” என்றார் 

Post a Comment

Previous Post Next Post

Contact Form