ஜேஇஇ அட்வான்ஸ்டு 2024-ல் கோவை ஆகாஷ் மாணவர்கள் தேர்ச்சி

  தேர்வு தயாரிப்பு சேவைகளில் முன்னனியில் இருக்கும் ஆகாஷ் 



எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்-ன் கோவை  மையத்தைச் சேர்ந்த மாணவன் ஸ்ரீராம் எம் ஏ  மதிப்புமிக்க ஜேஇஇ அட்வான்ஸ்டு 2024 தேர்வில் அதிக மதிப்பெண் அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 390வது இடம் பெற்று  தேர்ச்சி அடைந்துள்ளதை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த குறிப்பிடத்தக்க சாதனை மாணவனின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஏஇஎஸ்எல் வழங்கிய உயர்தர பயிற்சிக்கு ஒரு சான்றாகும். தேர்வு முடிவுகளை ஐஐடி மெட்ராஸ் வெளியிட்டுள்ளது.

"உள்ளடக்கம் மற்றும் பயிற்சி என ஆகாஷ் எனக்கு இரண்டிலும் உதவியதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஏஇஎஸ்எல்-ன் இந்த உதவி இல்லாமல் நான் குறுகிய காலத்தில் வெவ்வேறு பாடங்களில் பல கருத்துகளைப் புரிந்துகொண்டிருக்க மாட்டேன்," என்று மாணவர் கூறினார்.

மாணவரின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்த ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்-ன் முதன்மை கல்வி மற்றும் வணிகத் தலைவர் தீரஜ் மிஸ்ரா, "மாணவனின் முன்மாதிரியான சாதனைக்காக நாங்கள் வாழ்த்துகிறோம். மாணவனின் சாதனை அவரது கடின உழைப்பையும் அர்ப்பணிப்பு மற்றும் பெற்றோரின் ஆதரவு ஆகியவற்றைப் பறைசாற்றுகிறது. மாணவனின் எதிர்கால முயற்சிகளில் சிறப்பாக அமைய நாங்கள் வாழ்த்துகிறோம்” என்றார்.

ஜேஇஇ அட்வான்ஸ்டு ஆண்டுதோறும் ஐஐடிகளில் ஒன்றால் நடத்தப்படுகிறது. ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காக இது நடத்தப்படுகிறது. ஜேஇஇ மெயின்ஸ் என்பது பல தேசிய தொழில்நுட்பக் கழகம் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மைய உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கானது என்றாலும், இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் சேர்வதற்கான ஒரு முக்கிய தேர்வாக ஜேஇஇ அட்வான்ஸ்டு கருதப்படுகிறது. மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டுக்கு தேர்வில் இடம்பெற ஜேஇஇ மெயின் தேர்வு எழுத வேண்டும். ஜேஇஇ அட்வான்ஸ்டு 2024-ல் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு தாள்களிலும் மொத்தம் 180,200 விண்ணப்பதாரர்கள் தேர்வாகியுள்ளனர். மொத்தம் 48,248 மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டு 2024 இல் தகுதி பெற்றுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form