சிப்லாவின் அனைவருக்கும் ஆஸ்துமா பாதுகாப்பு பிரச்சாரம்

இந்த ஆண்டு உலக ஆஸ்துமா நாளுக்கான மைய நோக்கம் ‘அனைவருக்கும் ஆஸ்துமா பாதுகாப்பு’ ஆகும்.  தரமான மருந்து மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆதாரங்களுக்கான மேம்பட்ட அணுக்கம் மூலம் நோயைச் சிறப்பாக மேலாண்மை செய்வதே நோக்கமாகும். இந்த ஆண்டுக்கான மைய நோக்கம் இந்தியாவில் தற்போது நிலவும் நோய்ச் சூழலுடன் மிக வலுவாக ஒத்துப் போகிறது. ஆஸ்த்மா தொற்றாத நோயாகும். எல்லா வயதினரையும் பாதிக்கும் நோய் என்றாலும், குழந்தைகளிடையே காணப்படும் பொதுவான நாள்பட்ட நோயாகும். 

இதன் காரணமாக சுவாஸக் குழாய்கள் குறுகும், வீங்கும், அதிகப்படியான சளியை உற்பத்தி செய்யும்.  மூச்சு விடுவதைச் சிரமப்படுத்தும்.  ஆஸ்த்மா சிகிச்சையில் மூச்சு உள்ளிழுக்கும் சிகிச்சை முக்கிய அம்சமாகும்.  எதிர்பாராவிதமாக, இந்தச் சிகிச்சை பற்றிய தவறான கருத்துக்களால், ஆஸ்த்மா நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரைகளைப் பின்பற்றத் தவறுகின்றனர் அல்லது மறுக்கின்றனர்.

நோயாளிகளுக்குப் போதிய ஆற்றலையும், தொடர் ஆதரவையும் அளிப்பதன் வாயிலாக,  ஆஸ்த்மா தொடர்பான அவர்களது அணுகுமுறை மற்றும் நடத்தையில் ஆக்கப்பூர்வ மாற்றத்தை ஏற்படுத்த முடியும். பொது மற்றும் சிப்லாவின் #பெரோக்ஜிந்தகி பிரச்சாரம் உள்ளிட்ட நோயாளி விழிப்புணர்வு முனைவுகள், சமூக உரையாடல்கள், ஆகியவை மூலம் மக்களிடையே தவறான எண்ணங்கள் பரவுவதைத் தடுக்க முடியும். இருப்பினும், சூழலமைவு மூலம் விழிப்புணர்வு முனைவுகள் கணிசமாக எட்டப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். இது சிப்லா ப்ரீத்ஃப்ரீ திட்டம் உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்புகளுக்கான மேம்பட்ட அணுக்கத்துக்கு வழிவகுக்கும்.

ஆஸ்த்மா குறித்து நாட்டில் நிலவும் பொதுவான கருத்து, நோய் விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை ஏற்பு குறித்து அவசியத்தை வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்த நுரையீரல் நிபுணர் ஆலோசகர் டாக்டர் கே.பாரதி பாபு பேசுகையில் ‘, சமூக இழிவு, தவறான எண்ணங்கள், கட்டுக்கதைகள் ஆகியவற்றால் இந்திய ஆஸ்த்மா சூழப்பட்டுள்ளதால், இங்குள்ள ஆஸ்த்மா நோயாளிகளுள் 23 சதவிகிதம் மட்டுமே தங்களுக்கு ஆஸ்த்மா இருப்பதை வெளிப்படையாகப் பெயர் சொல்லித் தெரிவிக்கின்றனர். தங்களுக்கு ஆஸ்த்மா இருப்பதைத் தெரிவிக்க மறுக்கக் காரணம் 70 சதவிகிதத்துக்கும் அதிகமான தீவிர ஆஸ்த்மா நோயாளிகள் இன்னும் மருத்துவ ரீதியாக முறையாகப் பரிசோதிக்கப்படவில்லை என்பதுதான். ஆஸ்த்மா போன்ற நாள்பட்ட சுவாச நோய்களுக்கு ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நோயாளியின் உடல் நிலையை மேம்படுத்தி இத்தகைய பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பதுஅவசியமாகும்’ என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form