ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் சார்பில் முகவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள்

 

இந்தியாவின் முன்னணி ஸ்டாண்டலோன் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்  முகவர் சமூகத்தின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை ஆதரிப்பதும் அவர்களைக் கவனித்துக்கொள்வதன் ஒரு முக்கிய பகுதியாகும் என ஸ்டார் ஹெல்த் கருதுகிறது. மதுரை, தமிழ்நாட்டில் உள்ள மதுரை டவுன், பரமக்குடி மற்றும் கம்பம் ஆகிய மூன்று இடங்களில் தனது முகவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தியது. இந்த முகாம்களில் 420-க்கும் மேற்பட்ட முகவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பயனடைந்தனர்.

 வருமுன் காப்பு நடவடிக்கைகள், மருத்துவ ஆலோசனை மற்றும் சுகாதார விழிப்புணர்வை முகவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நெருக்கமாகக் கொண்டு செல்வதன் மூலம், முகவர் சமூகத்தின் நலனை தொடர்ந்து பாதுகாப்பதற்கான ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அமைந்துள்ளது.

இந்த மருத்துவ முகாம்கள் லட்சுமணா மருத்துவமனை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் அப்போலோ மருத்துவமனை, மதுரை, மற்றும் வாசன் ஐ கேர், தேனி ஆகிய மருத்துவ நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட்டன.பங்கேற்பாளர்களுக்கு ஈசிஜி, எக்கோ, பிஎஃடி, ஹீமோகுளோபின், ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, உயரம் மற்றும் எடை அளவீடுகள் மற்றும் விரிவான கண் பரிசோதனைகள் உள்ளிட்ட முழுமையான சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து, சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகள் மற்றும் தனிப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் முகவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தங்களது உடல்நலக் குறியீடுகளை நன்கு புரிந்துகொண்டு, தேவையான இடங்களில் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க உதவியது.

மருத்துவக் குழுக்கள் வழக்கமான இதயப் பரிசோதனை, வருமுன் காப்பு நடவடிக்கைகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் அவசரநிலை மேலாண்மை உள்ளிட்ட தலைப்புகளில் மருத்துவக் காப்பீடு அமர்வுகளையும் நடத்தினர். பங்கேற்பாளர்களிடம் உரையாற்றிய பி. பாலசுப்ரமணியன், மண்டல மேலாளர், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ், ஒவ்வொரு குடும்பத்திற்கும் மருத்துவக் காப்பீடின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், சுகாதாரப் பாதுகாப்பு குறித்த அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு வலியுறுத்தினார்.

கம்பத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். பிளா ஜெகநாத் மிஸ்ரா மற்றும் வினோத் பால், உதவி மண்டலத் தலைவர், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் காப்பீடு எளிதில் கிடைக்கச் செய்வதன் முக்கியத்துவம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் உரையாற்றினார். மேலும், தனது முகவர் சமூகத்திற்கு மருத்துவ உதவி மற்றும் ஆதரவு சேவைகளை வழங்குவதற்காக ஸ்டார் ஹெல்த் மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

 ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் மருத்துவக் காப்பீடு தீர்வுகள் மூலம் மதுரை மண்டலத்தில் தற்போது 2.45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காப்பீட்டு பாதுகாப்பைப் பெற்றுள்ளனர்.

நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து, மதுரை மண்டலத்தில் ₹540.08 கோடி மதிப்பிலான காப்பீட்டு கோரிக்கைகளை ஸ்டார் ஹெல்த் தீர்வு செய்துள்ளது. இதில் FY 2025-26-ல் ₹101.35 கோடி மதிப்பிலான 15,287 காப்பீட்டு கோரிக்கைகள் அடங்கும். 227 இணைக்கப்பட்ட மருத்துவமனைகள் கொண்ட நெட்வொர்க் மூலம், வாடிக்கையாளர்கள் தரமான சுகாதார சேவையை அணுகுவதற்கு ஸ்டார் ஹெல்த் தொடர்ந்து வசதி செய்து வருகிறது.

இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த பாலாஜி பாபு சி., தமிழ்நாடு வர்த்தகத் தலைவர், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ், “ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் பயணத்தில் எங்களது முகவர்கள் ஒரு முக்கிய அங்கமாக உள்ளனர். தங்களது உடல்நலம் மற்றும் நிதி நலனைப் பாதுகாப்பது குறித்து வழிகாட்டுதலைத் தேடும் குடும்பங்களுக்கு அவர்கள் பெரும்பாலும் முதல் தொடர்பு நபர்களாக இருக்கின்றனர். எனவே, முகவர்களை கவனித்துக்கொள்வது என்பது அவர்களுக்கு தொழில்முறை ஆதரவை வழங்குவதைக் கடந்து செல்கிறது. இந்த மருத்துவ முகாம்கள் மூலம், எங்களது முகவர் சமூகத்தில் தடுப்பு சுகாதார பராமரிப்பு, வழக்கமான உடல்நல கண்காணிப்பு மற்றும் தகவலறிந்த சுகாதாரத் தேர்வுகளுக்கான கலாச்சாரத்தை ஊக்குவிக்க விரும்புகிறோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form