மஹிந்திரா குழுமத்தின் ஒரு பகுதியாகவும், இந்தியாவின் நம்பர் 1 டிராக்டர் பிராண்டுமான மஹிந்திரா டிராக்டர்ஸ் நிறுவனம், எதிர்காலத்திற்குத் தயாரான ஓஜேஏ டிராக்டர்களின் வரிசையின் அடிப்படையில், ஓஜேஏ 2130 தொடரின் உற்பத்தியை அதிகரிக்கத் தயாராகி வருகிறது. ஓஜேஏ 2130 தொடரானது 30 எச்பி பிரிவில் ஓஜேஏ 2130 ப்ரோஜா, ஓஜேஏ 2130 லார்ஜ் டயர் (9.5 x18 டயர்களுடன்) மற்றும் எப்ஆர் (பார்வர்டு + ரிவர்ஸ்) ஷட்டில் கொண்ட ஓஜேஏ 2130 நேரோ டிராக் ஆகவும் வழங்கப்படுகின்றன.
இந்த ஓஜேஏ 2130 தொடர் மூலம், மஹிந்திரா, அதிநவீன தொழில்நுட்பம், சிறந்த செயல்திறன் மற்றும் பல்துறை தீர்வுகளை வழங்கி, தோட்டக்கலை, திராட்சைத் தோட்டம், பண்படுத்து விவசாயம், கரும்பு மற்றும் பருத்தி தொடர்பான ஒரு பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு நம்பகமான டிராக்டர் செயல்திறனை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், முன்னேறும் விவசாயிகளின் வளர்ந்து வரும் தேவைகளையும் இது பூர்த்தி செய்கிறது.
வலுவான மைய தொழில்நுட்பங்களால் ஆதரிக்கப்படும், ஓஜேஏ தளமானது, செயல்திறன் மற்றும் ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தை கணிசமாக மேம்படுத்துகிறது. வகுப்பில் சிறந்த சுமைக்கு ஏற்ற சக்தி விகிதத்துடன், ஓஜேஏ 2130 தொடர், பல்வேறு விவசாய பணிகளுக்கு அதிக சக்தியையும் விரைவியக்கத்தையும் வழங்குகிறது. நிலையான 4 வீல் டிரைவ், மாறுபட்ட நிலப்பரப்புகளில் இழுவிசை மற்றும் உற்பத்தித்திறனை உறுதி செய்கிறது.
இந்த புதிய ஓஜேஏ டிராக்டர் தொடரின் மையத்தில், அதிநவீன, மற்றும் சக்திவாய்ந்த மூன்று - சிலிண்டர் டிஐ எஞ்சின் உள்ளது. இது 83.7 என்எம் முறுக்கு விசையையும், அதிக காப்பு முறுக்குவிசையையும் வழங்குவதுடன், சிறந்த எரிபொருள் சிக்கனத்தையும், அதிக சுமைகளை இழுத்துச் செல்லும் திறனையும் வழங்குகிறது.
கூடுதலாக, இயக்குபவரின் வசதிக்காக இந்த இயங்குதளம் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதில் தொழில்துறையிலேயே முதன்மையான டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங், சைட்-ஷிஃப்ட் கட்டுப்பாடுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. கூடுதலாக, ஒவ்வொரு பயிர் சுழற்சிக்குமான இயக்கச் செலவுகளைக் குறைப்பதன் மூலமும், காலப்போக்கில் பராமரிப்புச் செலவுகளைக் குறைப்பதன் மூலமும் இந்த ஓஜேஏ வரம்பு, செலவு-செயல்திறனை வழங்குகிறது.
மஹிந்திரா டிராக்டர்ஸ் (டிபிசி) நிறுவனத்தின் விற்பனை, சந்தைப்படுத்துதல் மற்றும் தேசிய வணிக செயல்பாடுகள் தலைவர் பரிக்ஷித் கோஷ் கூறுகையில், "இந்த ஓஜேஏ ஆனது ஆற்றலின் மையமாகும், மேலும் தோட்டக்கலை, கரும்பு, பருத்தி போன்ற முக்கிய பிரிவுகளில் விவசாயிகளின் வளர்ந்து வரும் தேவைகளுக்காக ஓஜேஏ 2130 தொடரின் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய நாங்கள் மஹிந்திரா டிராக்டர்ஸ் நிறுவனத்தில் தயாராகி வருகிறோம். நாடு முழுவதும் விவசாய நடைமுறைகளை மாற்றியமைக்கும் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளுடன் விவசாயிகளை மேம்படுத்துகின்ற இந்த டிராக்டர்கள் மூலம், 21 டூ 30 குதிரைத்திறன் பிரிவில் மஹிந்திரா அதன் தலைமைத்துவத்தை மேலும் வலுப்படுத்துகிறது,"என்று கூறினார்.
மஹிந்திரா நிறுவனத்தின் தொழில்துறையிலேயே சிறந்த ஆறு வருட உத்தரவாதத்தால் ஆதரிக்கப்படும் இந்த புதிய ஓஜேஏ டிராக்டர்கள், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் நீண்ட கால நம்பகத்தன்மைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை நாடு முழுவதும் உள்ள மஹிந்திரா டிராக்டர்ஸ் டீலர்ஷிப்களில் கிடைக்கின்றன.
