எதிர்காலத்திற்காக சேமிப்பது என்பது பெரும்பாலான மக்கள் செய்ய விரும்பும் ஒன்று - ஆனால் நீண்ட கால சேமிப்புத் திட்டத்தை தொடங்குவதை பெரும்பாலானோர் கடினமாக உணரலாம். அதிகரித்து வரும் வீட்டுச் செலவுகள், மாறிவரும் முன்னுரிமைகள் மற்றும் ஆண்டுதோறும் பிரீமியங்களைச் செலுத்த வேண்டிய அழுத்தம் ஆகியவை நீண்டகால உறுதிப்பாடுகளைத் தக்கவைத்துக்கொள்வதை கடினமாக்கும். சேமிப்பை எளிமையாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்ற, டாடா ஏஐஏ ஆயுள் காப்பீடு அதன் நீண்ட கால சேமிப்புத் திட்டமான ஃபார்ச்சூன் கியாரண்டி சுப்ரீம்*-ஐ. உத்தரவாதமான வருமானத்தை வழங்கும் அதே வேளையில் நிதிச் சுமையைக் குறைக்கும் அம்சங்களுடன் மேம்படுத்தியுள்ளது
இந்த மேம்பாட்டின் மையத்தில் டாடா ஏஐஏவின் தனித்துவமான ‘பிரீமியம் ஆஃப்செட்’ முன்மொழிவு உள்ளது. இந்த அம்சத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் 12 வருட பிரீமியம் செலுத்தும் காலத்தின் முதல் ஆறு ஆண்டுகளுக்கு மட்டுமே பிரீமியங்களைச் செலுத்துவார்கள். மேலும் மீதமுள்ள ஆறு பிரீமியங்களை டாடா ஏஐஏ வழங்கும் வருமான நன்மையுடன் ஈடுசெய்து தேர்வு செய்யலாம். இந்த ஆஃப்செட் அமைப்பு வாடிக்கையாளர்கள் 12 வருடங்களுக்கும் பிரீமியங்களைச் செலுத்த வேண்டுமென்ற அழுத்தமில்லாமல் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய அனுமதிக்கிறது. பணத்டை தொடர்ந்து சேமித்துக் கொண்டே இருப்பதைக் குறைப்பதன் மூலம், இந்தத் திட்டம் ஒழுக்கமான சேமிப்பிற்கான தடையைக் குறைக்கிறது. குறிப்பாக செலவுகள் மற்றும் வரிகள் பெரும்பாலும் நீண்ட கால நிதி உறுதிப்பாடுகளை அதிகமாக உணர வேண்டிய சூழலில் இது உதவிகரமாக இருக்கும்
இந்த மேம்பாடு குறித்து கருத்து தெரிவித்த டாடா ஏஐஏ ஆயுள் காப்பீட்டின் தலைமை விநியோக அதிகாரி ஜீலானி பாஷா, பலர் நீண்ட காலத்திற்கு சேமிக்க விரும்புகிறார்கள், ஆனால் அதிகரித்து வரும் செலவுகளானது பிரீமியம் செலுத்துதலைத் தக்கவைத்துக்கொள்வதை கடினமாக்கிவிடும் என்று அவர்கள் அடிக்கடி கவலைப்படுகிறார்கள். பிரீமியம் ஆஃப்செட் அம்சம் மற்றும் கணிக்கக்கூடிய வருமான சலுகைகளுடன், ஃபார்ச்சூன் கேரண்டி சுப்ரீம் நீண்ட கால சேமிப்பை எளிதாகவும் நிர்வகிக்கக்கூடியதாகவும் ஆக்குகிறது. இது நுகர்வோர் அதிகரித்து வரும் செலவுகளின் மன அழுத்தம் இல்லாமல் தங்கள் நிதி இலக்குகளுடன் தொடர்ந்து சரியான பாதையில் செல்ல அனுமதிக்கும். எதிர்காலத்திற்கான மிகவும் பாதுகாப்பான மற்றும் கணிக்கக்கூடிய பாதையை வழங்கும், என்றார்.
ஒரு தனிநபர், எதிலும் இணைக்கப்படாத, பங்கேற்காத ஆயுள் காப்பீட்டு சேமிப்புத் திட்டமாக, ஃபார்ச்சூன் கேரண்டி சுப்ரீம், பாலிசி காலம் முழுவதும் ஆயுள் காப்பீட்டோடு உத்தரவாதமான நன்மைகளையும் வழங்குகிறது. எதிர்பாராத சூழ்நிலைகளிலும் தொடர்ச்சி மற்றும் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. தகுதியான பிரீமியங்கள் பிரிவு 80C இன் கீழ் வரிச் சலுகைகளுக்குத் தகுதி பெறுகின்றன. அதே நேரத்தில் முதிர்வு மற்றும் இறப்பு சலுகைகள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10(10D) இன் கீழ் விலக்கு அளிக்கப்படுகின்றன. இது நடைமுறையில் உள்ள வரிச் சட்டங்களுக்கு உட்பட்டது.
இந்த மேம்பாடுகள் மூலம், டாடா ஏஐஏ ஆயுள் காப்பீடு, நுகர்வோர் தயக்கம் மற்றும் செலவு தொடர்பான கவலைகளைத் தாண்டிச் செல்ல உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது - அதிக எளிமை, நம்பிக்கை மற்றும் தெளிவுடன் நீண்ட கால சேமிப்பில் ஈடுபட அவர்களை அதிகாரம் அளிக்கிறது.