பிஜிஐஎம் இந்தியா சொத்து மேலாண்மை நிறுவனத்தின் புதிய பண்ட் அறிமுகம்


 முதலீட்டாளர்களுக்கு அபாயத்தை குறைத்து வருமானத்தை சமநிலைப்படுத்தும் விதமாக ‘மல்டி அசெட் ஒதுக்கீட்டு பண்ட்’ என்னும் மியூச்சுவல் பண்ட் திட்டத்தை பிஜிஐஎம் இந்தியா சொத்து மேலாண்மை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் திரட்டப்படும் நிதியானது குறைந்தது மூன்று வெவ்வேறு சொத்து பிரிவுகளில் முதலீடு செய்யப்படும். ஒட்டுமொத்த போர்ட்போலியோ அபாயத்தைக் குறைத்து நிலைத்தன்மையை வழங்குவதற்காக வெவ்வேறு சொத்து பிரிவுகளில் முதலீடு செய்வதன் மூலம் ஆபத்து மற்றும் வருமானத்தை சமநிலைப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.

இந்த புதிய நிதி திட்டம் நவம்பர் 11, 2025 அன்று துவங்கி நவம்பர் 25, 2025 அன்று முடிவடைகிறது. மேலும் டிசம்பர் 03, 2025 அன்று மீண்டும் திறக்கப்படுகிறது. இந்த நிதி, சந்தை சுழற்சிகளுக்கு ஏற்ப மாறும் ஒதுக்கீட்டைக் கொண்டு, பங்கு, கடன், தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு, ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள், உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் போன்ற பலதரப்பட்ட சொத்து வகைகளில் முதலீடு செய்யப்படும்.

இது குறித்து பிஜிஐஎம் இந்தியா சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அபிஷேக் திவாரி கூறுகையில், பிஜிஐஎம் இந்தியா மல்டி அசெட் ஒதுக்கீட்டு பண்ட், முதலீட்டாளர்கள் சொத்து வகுப்புகளில் வாய்ப்புகளைப் பெறும்போது நிச்சயமற்ற தன்மையைக் கடக்க உதவும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. "முதலீட்டில் பல்வகைப்படுத்தல் மட்டுமே இலவச மதிய உணவு" என்ற பிரபலமான பழமொழி, பல சொத்து ஒதுக்கீட்டு நிதிகளை மனதில் கொண்டு இது உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு முதலீட்டாளர் தனது முதலீட்டை மேம்படுத்தவும், வருமான திறனை எந்தவித சமரசம் செய்யாமல் மேம்படுத்தவும் முடியும் என்று தெரிவித்தார்.

இது குறித்து இந்நிறுவனத்தின் தலைமை தகவல் அதிகாரி வினய் பஹாரியா கூறுகையில், நிச்சயமற்ற உலகில், பல சொத்து ஒதுக்கீட்டு நிதிகள் தெளிவு, பல்வகைப்படுத்தல் மற்றும் மீள்தன்மையை வழங்குகின்றன. நிலையற்ற சந்தைகளில், பல்வகைப்படுத்தல் என்பது வெறும் உத்தி மட்டுமல்ல, அது ஒரு தேவையும் கூட. எங்களின் புதிய திட்டம் அதை வழங்க முயற்சிக்கிறது என்று தெரிவித்தார்.

இது குறித்து பிஜிஐஎம் இந்தியா அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின்  மூத்த நிதி மேலாளர்  விவேக் சர்மா கூறுகையில், பிஜிஐஎம் இந்தியா மல்டி அசெட் ஒதுக்கீட்டு பண்ட் சந்தை சுழற்சிகள் முழுவதும் ஆபத்து இல்லா விளைவுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பங்கு, கடன் மற்றும் பொருட்களில் முதலீடு செய்வதன் மூலம், அது எதிர்மறையான அபாயத்தை குறைக்கும் அதே வேளையில், முதலீட்டாளர்கள் நீண்ட கால பலனை பெற முடியும் என்று தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form