இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி, இன்று தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள உத்தங்குடியில் ஒரு கரன்சி செஸ்ட்டை (கரன்சி நோட்டுகள் பாதுகாப்பு அறை) திறந்து வைத்தது. இது தமிழ்நாட்டில் இவ்வங்கியின் மூன்றாவதும், தெற்கு மண்டலத்தில் எட்டாவதும், இந்திய அளவில் 37வது வசதியாகும்.
இந்தக் கரன்சி செஸ்ட். திறப்பு விழாவில் ரிசர்வ் வங்கியின் பிராந்திய இயக்குநர் திருமதி உமா சங்கர் அவர்கள், எச்டிஎஃப்சி வங்கியின் நிர்வாக இயக்குநர் திரு. பவேஷ் சவேரி, எச்டிஎஃப்சி வங்கியின் குழுமத் தலைவர் திரு. கவுரப் ராய், எச்டிஎஃப்சி வங்கியின் கிளை வங்கி, உள்கட்டமைப்பு, கருவூலம் மற்றும் மெய்நிகர் சேனல்கள் குழுமத் தலைவர் திரு. ஆஷிஷ் பார்த்தசாரதி, எச்டிஎஃப்சி வங்கியின் சில்லறை விற்பனைக் கிளை வங்கி குழுமத் தலைவர் திரு. சம்பத் குமார், எச்டிஎஃப்சி வங்கியின் தெற்கு கிளை வங்கித் தலைவர் திரு. சஞ்சீவ் குமார், எச்டிஎஃப்சி வங்கியின் பிராந்தியத் தலைவர் திரு. ராஜேஷ் ஆர். சர்மா, எச்டிஎஃப்சி வங்கியின் மாநிலத் தலைவர் திரு. கேசவன் ரங்காச்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதியதாகத் திறக்கப்பட்ட இந்த வசதி, அதிநவீன தொழில்நுட்பங்களால் இயக்கப்படும் அமைப்புகள், மிக உயர்ந்த பாதுகாப்பு தரங்கள், உலகத் தரத்திலான ஜெர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்ட கரன்சி வரிசைப்படுத்தும் இயந்திரங்களுடன் துல்லியமான, நம்பகமான, திறமையான செயல்திறனை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பண விநியோகத்தை திறம்படச் செய்யவும், சுத்தமான மற்றும் பொருத்தமான கரன்சி நோட்டுகள் உரிய நேரத்தில் கிடைப்பதை எல்லா பங்குதாரர்களுக்கும் உறுதி செய்யவும் இது முக்கியப் பங்கை வகிக்கும். இந்தப் புதிய கரன்சி செஸ்ட் மதுரை, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சுற்றியுள்ள 176 சில்லறைக் கிளைகள் மற்றும் 247 ஏடிஎம்-க்களுக்கு தேவையான கரன்சி நோட்டுகளை வழங்கும். இதன் மூலம், பணப் பரிமாற்றத்தின் சுழற்சி நேரம் மேம்படும். மேலும், இது பல பெருநிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், உள்ளூர் மக்களுக்கும் பயனளிக்கும், ஏனெனில் இது அந்த பிராந்தியத்தில் கரன்சி நோட்டுக்களின் மேலாண்மையை மேம்படுத்தும்.
“இந்த புதிய கரன்சி செஸ்ட்டை செயல்படுத்துவது எங்களது செயல்பாட்டு எல்லையை மேலும் விரிவுபடுத்தி, அதிவேகமாகவும் நம்பகமாகவும் ஆழமான புவியியல் பகுதிகளுக்கு சேவைகளை வழங்கும் திறனை மேம்படுத்தும். இது ஒவ்வொரு மட்டத்திலும் வங்கியை எளிமைப்படுத்துவதில் எங்கள் நீடித்த அர்ப்பணிப்பையும், வங்கிச் சூழலின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான எங்கள் தயார்நிலையையும் பிரதிபலிக்கிறது," என்று எச்டிஎஃப்சி வங்கியின் நிர்வாக இயக்குநர் திரு. பவேஷ் ஜவேரி அவர்கள் கூறினார்.