உலக ஆஸ்துமா விழிப்புணர்வு மாதத்தில் ஆஸ்துமா குறித்த புரிதலை மேம்படுத்தும் சிப்லா



அதிக இறப்பு விகிதங்கள் மற்றும் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படுதல் ஆகியவற்றின் காரணமாக  ஏற்படும் பொது சுகாதார சவால்களுக்கு மத்தியில், ஆஸ்துமா நிர்வாகம் பயன்தரும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தின் மீது கவனம் செலுத்துகிறது. இந்த ஆண்டு உலக ஆஸ்துமா தினத்தின் கருப்பொருள், "ஆஸ்துமா குறித்த புரிதலை மேம்படுத்துதல்," ஆஸ்துமா மேலாண்மை மற்றும் நோயாளியின் விளைவுகளை மேம்படுத்துவதில் புரிதலின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.  

பயனுள்ள ஆஸ்துமா மேலாண்மை என்பது பன்முகத்தன்மை கொண்டதாகவும், விழிப்புணர்வு முயற்சிகளுக்கான கவனிப்பின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்பால் ஆதரிக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். நோய் மற்றும் சிகிச்சை குறித்த விழிப்புணர்வு முதல் நோயறிதல், ஸ்கிரீனிங், ஆலோசனை மற்றும் சிகிச்சையைப் பின்பற்றுதல் வரை, ஆஸ்துமா பயணத்தின் ஒவ்வொரு படியும் மிக முக்கியமானது.

விழிப்புணர்வுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், ஏற்றதொரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதன் மூலமும், நோயாளிகள் தங்கள் ஆஸ்துமா சிகிச்சை மேற்கொள்ளும் காலம் முழுவதும் தேவையான ஆதரவைப் பெறுவதை உறுதி செய்வதில் சிப்லா அர்ப்பணிப்புடன்  செயல்படுகிறது.    டஃபிஸ் பிரச்சாரம், ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் உள்ள  அனைத்து குழந்தைகள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்களை  ஈர்க்கும் வகையில்  காமிக் புத்தகங்கள் மற்றும்  டஃபிஸ் கி ஸ்கூல் யாத்ரா போன்ற ஆன்-கிரவுண்ட் பள்ளி நிகழ்ச்சிகள் மூலம் உத்வேகம் அளிக்கும் இயக்கமாக உருவெடுத்துள்ளது.  

சிப்லாவின் பெரோக் ஜிந்தகி மற்றும்  டஃபிஸ் போன்ற பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு, நோயாளி ஆதரவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் நிறுவனத்தின் ப்ரீத்ஃப்ரீ முன்முயற்சி போன்றவை, நோயாளிகளுக்கான ஆதரவு வலையமைப்பை உருவாக்குகிறது. ப்ரீத் ஃப்ரீ என்பது ஏஐ-இயக்கப்பட்ட சாதன பயிற்சி தளம் உட்பட உடல் மற்றும் டிஜிட்டல் கூறுகளை உள்ளடக்கியது. களத்தில் மேற்கொள்ளப்படும் ஸ்க்ரீனிங் முகாம்களிலிருந்து, ஏஐ ஆனது ப்ரீத்ஃப்ரீ டிஜிட்டல் எஜுகேட்டர் பிளாட்ஃபார்ம் மற்றும் டிவைஸ் ட்ரைனிங் ஹவ் டூ வீடியோக்களை செயல்படுத்தியது. இது ப்ரீத்ஃப்ரீ ஆஸ்துமாவுடன் வாழ்பவர்களுக்கு ஒரே இடத்தில் ஆதரவுடன்  தீர்வளிக்கும் இடமாக  மாறியுள்ளது.

புரிதலுக்கு அதிகாரமளிக்கும் நடவடிக்கையின் முக்கியத்துவம் குறித்து மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் மற்றும் மூத்த ஆலோசகர், டாக்டர். பிரேம் அனந்த் பி., பேசுகையில், “குறுகிய சுவாசப்பாதைகள், தூண்டுதல்களால் அதிகரித்த உணர்திறன் (தூசி பூச்சிகள், புகை, குளிர் காற்று போன்றவை)  மற்றும் சுவாசப் பாதைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் ஆஸ்துமா  என்பது ஒரு நீண்ட கால மற்றும் நாள்பட்ட நோயாகும். இது குணப்படுத்த முடியாததாக இருந்தாலும், சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் முறையான மருத்துவச் சிகிச்சை மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியும். இருப்பினும், தவறான கருத்துக்கள், குறிப்பாக இன்ஹலேஷன் தெரபி குறித்தவை போன்றவை பெரும்பாலும் நோயாளிகள் தங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றத் தவறுவதற்கு வழிவகுக்கிறது.  விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம், சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் பொருத்தமான சிகிச்சையை நாம் உறுதிப்படுத்த முடியும்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form