நெல்லை ஆகாஷ் மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்



தேர்வு தயாரிப்பு சேவைகளில் முன்னனியில் இருக்கும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்-ன் நெல்லை  மையத்தைச் சேர்ந்த மாணவன் ஸ்ரீராம் ஏ  மதிப்புமிக்க ஜேஇஇ அட்வான்ஸ்டு 2024 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 423வது இடம் பெற்று  தேர்ச்சி அடைந்துள்ளதை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த குறிப்பிடத்தக்க சாதனை மாணவனின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஏஇஎஸ்எல் வழங்கிய உயர்தர பயிற்சிக்கு ஒரு சான்றாகும்.

திருநெல்வேலி ஆகாஷ் பயிற்சி மையத்தில் பயின்ற ஏ.ஸ்ரீராம், ஆர்.பிரனவ் ராம், எஸ்.சஞ்சய்,  ஆர்.அச்சுத நாராயணன், பி.விஷ்ணு சாரதி, பி.இசை செல்வன், எம்.மாரிமுத்து, காவ்யா, கனிஷ்கா வர்ஷினி, விக்னேஷ்வரன், பி.பார்வதி, டி.மோனிஷா ஆகியோர் ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  நெல்லையில் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா ஆகாஷ் பயிற்சி மையத்தில் நடந்தது. இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், சக மாணவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

உலகளவில் கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டுக்குத் தயாராவதற்காக மாணவர் ஏஇஎஸ்எல்-ன் வகுப்பறைத் திட்டத்தில் சேர்ந்தார். பாடக் கருத்துக்கள் பற்றிய அவரது கடுமையான புரிதல் மற்றும் படிப்பு அட்டவணையை கண்டிப்பாக கடைபிடித்ததே அவரது குறிப்பிடத்தக்க வெற்றிக்கு காரணம் என்றார். "உள்ளடக்கம் மற்றும் பயிற்சி என ஆகாஷ் எனக்கு இரண்டிலும் உதவியதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஏஇஎஸ்எல்-ன் இந்த உதவி இல்லாமல் நான் குறுகிய காலத்தில் வெவ்வேறு பாடங்களில் பல கருத்துகளைப் புரிந்துகொண்டிருக்க மாட்டேன்," என்று மாணவர் கூறினார்.

மாணவரின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்த ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்-ன் முதன்மை கல்வி மற்றும் வணிகத் தலைவர் தீரஜ் மிஸ்ரா, "மாணவர்களின் முன்மாதிரியான சாதனைக்காக நாங்கள் வாழ்த்துகிறோம். மாணவர்களின் சாதனை அவரது கடின உழைப்பையும் அர்ப்பணிப்பு மற்றும் பெற்றோரின் ஆதரவு ஆகியவற்றைப் பறைசாற்றுகிறது.  அவர்களின் எதிர்கால முயற்சிகளில் சிறப்பாக அமைய நாங்கள் வாழ்த்துகிறோம்” என்றார்.

ஜேஇஇ அட்வான்ஸ்டு ஆண்டுதோறும் ஐஐடிகளில் ஒன்றால் நடத்தப்படுகிறது. ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காக இது நடத்தப்படுகிறது. ஜேஇஇ Main என்பது பல தேசிய தொழில்நுட்பக் கழகம் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மைய உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கானது என்றாலும், இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் சேர்வதற்கான ஒரு முக்கிய தேர்வாக ஜேஇஇ அட்வான்ஸ்டு கருதப்படுகிறது. மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் இடம்பெற ஜேஇஇ மெயின் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும். ஜேஇஇ அட்வான்ஸ்டு 2024 இல் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு தாள்களிலும் மொத்தம் 180,200 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். மொத்தம் 48,248 மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டு 2024 இல் தகுதி பெற்றுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form