ஸ்கோடாவின் புதிய கார்ப்பரேட் அடையாளம் அறிமுகம்



 ஸ்கோடா ஆட்டோ இந்தியா தனது அனைத்து புதிய காம்பேக்ட் எஸ்யூவியையும் அறிவித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி தொடர்ச்சியான பல்வேறு தயாரிப்பு நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது. மேலும், இந்தியாவில் அதன் புதிய சகாப்தத்தின் ஒரு பகுதியாக ஸ்கோடா நிறுவனம் தனது நெட்வொர்க் மற்றும் வாடிக்கையாளர்களை வலுப்படுத்துவதில் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இப்போது அதன் புதிய கார்ப்பரேட் அடையாளத்தை,  டீலர்ஷிப்கள், சேவை மையங்கள் மற்றும் பிற வாடிக்கையாளர் தொடர்பு கொள்ளும் டச் பாயிண்ட்களில் அமல்படுத்துவதாக பிராண்ட் அறிவித்துள்ளது.

 ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் புதிய ஸ்டைலிங் மற்றும் டைப்ஃபேஸ் என்பது, சமச்சீர் அடிப்படையிலான முற்றிலும் புதிய அச்சுக்கலனைப் பயன்படுத்துகிறது. புதிய கார்ப்பரேட் அடையாளம் என்பது 2022 முதல் பிராண்டின் வடிவமைப்புகளையும், அழகியலையும், வெளிப்படுத்தும் நவீன திடமான கோட்பாட்டின் விரிவாக்கமாகும். மேலும், ஸ்கோடா ஆட்டோவின் இலச்சினையான இறக்கை கொண்ட அம்பு படம், ஸ்கோடா வேர்ட்மார்க் சின்னத்துக்கு வழிவகுக்கும், இது நிறுவனத்தின் அனைத்து வாடிக்கையாளர் டச் பாயிண்ட்களிலும், தகவல் தொடர்பு மற்றும் படங்களில் ஒற்றுமையை உறுதி செய்யும். 

புதிய கார்ப்பரேட் அடையாளம், டீலர்ஷிப் வளாகத்தில் உள்ள விளம்பர அடையாளத்தின், வெளிச்ச ஒளிர்வை மாற்றப், பகல் அல்லது இரவு நேரத்தைப் பயன்படுத்தும் சுதந்திரத்தை அனுமதிக்கிறது. சமச்சீர் மற்றும் திடமான எழுத்துக்கள், பகலில் எமரால்டு கிரீன் மற்றும் இரவில் துடிப்பான எலக்ட்ரிக் கிரீன் ஆகியவற்றை ஒளிரச் செய்கின்றன. அதே தருணம், ஸ்கோடா சிக்னேசர் வண்ணங்களுடன், மாறுபட்ட ஆனால் சீரான தன்மையும் பராமரிக்கிறது.

இந்த மாற்றங்கள், ஸ்கோடா ஆட்டோ இந்தியா, தனது வரம்பை மேம்படுத்துவதற்கும், வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக இருப்பதற்கும், மேற்கொண்ட தொடர்ச்சியான தயாரிப்பு அல்லாத பரிணாமங்கள் மற்றும் ஈடுபாடுகளுக்கு ஏற்ப உள்ளன. அதன் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை 2025 முதல் அரையாண்டில், இந்தியாவில், உலக அளவில் அறிமுகப்படுத்தும் அறிவிப்புடன், புதிய சகாப்தத்தில் பிராண்ட் நுழைந்ததைத் தொடர்ந்து, ஸ்கோடா ஆட்டோ இந்தியா டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உத்திகளையும் செயல்படுத்தியது. இது வாடிக்கையாளர் ஈடுபாட்டின் அடிப்படையில் புரட்சிக்கு வழிவகுத்தது. 

2025 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட புதிய காம்பாக்ட் எஸ்யூவியின் அறிமுகத்திற்கு அனைத்து வாடிக்கையாளர் டச் பாயிண்ட்களும், புதிய கார்ப்பரேட் அடையாளத்துடன் சரியான நேரத்தில் தயாராக இருக்கும்.  புதிய கார்ப்பரேட் அடையாளத்தை விரைவாக அமல்படுத்துவதை உறுதிப்படுத்த, அனைத்து டீலர் கூட்டாளிகளும் மறு பிராண்டிங்கில் தீவிரமாக பங்கேற்க உள்ளனர் என ஸ்கோடா செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form