டூ யம்-ன் புதிய அறிமுகம்

ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா குழுமத்தின் எஃப்எம்சிஜி பிரிவின் ஒரு பகுதியான கில்ட்ஃப்ரீ இண்டஸ்ட்ரீஸ், சிற்றுண்டி வகைகளில் புதுமை மற்றும் ருசியின் உணர்வை மீண்டும் எழுப்ப அற்புதமான மற்றும் உற்சாகமளிக்கும் புதிய சுவையுடன் - டூ யம்! பூட் சிப்ஸை அறிமுகப்படுத்துகிறது.  இந்தியாவின் முன்னோடியான ஹாட் சாஸ் பிராண்டான நாகினுடன் இணைந்து, உணர்வுகளை தூண்டும் ஒரு இணையற்ற சிற்றுண்டி அனுபவத்தை வழங்கவுள்ளது. 

இந்த தயாரிப்பு ஆகஸ்ட் முதல் வர்த்தகம் மற்றும் இ-காமர்ஸ் தளங்களில் கிடைக்கும். கிடைக்கக்கூடிய எஸ்கேயூக்கள் பாரம்பரிய வர்த்தகத்திற்கு ரூபாய் 5, 10 மற்றும் 20 ஆகும், ரூபாய் 60 குறிப்பாக நவீன வர்த்தகம் மற்றும் இ-காமர்ஸ் ஆகியவற்றிற்காக செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்படும்.

  இதன் அறிமுகம் குறித்து, கில்ட்ஃப்ரீ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் யோகேஷ் திவாரி கூறுகையில், “டூ யம்! புதிய யுக பிராண்டாக இருப்பது, இன்றைய இளைஞர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. ஒருமுறை ருசித்த பூட் சிப்ஸை உங்களால் எதிர்க்க முடியாத அற்புதத்தை குழு உருவாக்கியுள்ளது”.

Post a Comment

Previous Post Next Post

Contact Form