ரெடிங்டன் ஃபவுண்டேஷன் பயோகேஸ் ஆலைகளை நிறுவியுள்ளது

ரெடிங்டன் அறக்கட்டளை அதன் சமூக பொறுப்புணர்வு முன்முயற்சியின் ஒரு பகுதியாக, குருத்தனமேடு கிராமத்தில் 67 பயோகேஸ் ஆலைகளை நிறுவியுள்ளது. மேலும் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ப்ரோ கனெக்ட் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் கிடங்கு செயல்பாடுகளுக்கு அருகில் உள்ள தண்டலச்சேரி கிராமத்தில் ஒரு குளத்தை புதுப்பித்து உள்ளது.

 புதைபடிவ எரிபொருளுக்கு மாற்றாக பயோ எரிபொருளின் பயன்பாட்டை ஊக்குவித்தல், பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கான நீர் இருப்பை மேம்படுத்துதல் மற்றும் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை நிரப்புதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும். கிராமப்புற மேம்பாட்டிற்காக பாடுபடும் அரசு சாரா நிறுவனமான ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூசிவ் டெவலப்மென்ட் அன்ட் சர்வீசஸ் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

500 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்ட உள்ளூர் நிகழ்ச்சியில், ரெடிங்டன் ஃபவுண்டேஷன் அந்தந்த கிராம பஞ்சாயத்துகளுக்கு பயோகேஸ் ஆலைகள் மற்றும் குளத்தை ஒப்படைத்தது. ஆர்.ஐஸ்வர்யா ராமநாதன், ஐஏஎஸ் - ஆர்டிஓ, விஜயராகவன், சிஎஃப்ஒ - ப்ரோகனெக்ட்,  ராகேஷ், ஹெச்.ஆர்- ப்ரோகனெக்ட், டாக்டர் பூர்ணிமா ராவ், டிரஸ்டி - ரெடிங்டன் ஃபவுண்டேஷன், ரெடிங்டன் & ப்ரோ கனெக்ட் மற்றும் எச்எச்ஐடிஎஸ் நிர்வாக குழுவினர் கலந்து கொண்டனர் என ரெடிங்டன் ஃபவுண்டேஷன் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.


Post a Comment

Previous Post Next Post

Contact Form