ஜேஎல்ஆர் இந்தியா நிறுவனம் கோயம்புத்தூரில், விஎஸ்டி கிராண்டியர் என்கிற, அதன் மாடர்ன் லக்ஸரி கார்களுக்கான புதுப்பிக்கப்பட்ட ரீடெயில் விற்பனை மையத்தினை புதிதாக திறந்துள்ளது. எண்145, 1சி, 1 எல் அண்ட் டி பைபாஸ் ரோடு, ஒட்டர்பாளையம், கோயம்புத்தூர் - 641016 என்ற முகவரியில் அறிவார்ந்த முறையில் அமைந்துள்ள இந்த மையமானது விற்பனை, சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்கும் ஒரு முழுமையான ஒருங்கிணைக்கப்பட்ட மையமாக இருக்கும். ஒப்பற்ற வாடிக்கையாளர் அனுபவத்தை உறுதியளிப்பதோடு, இம்மையம் நாடு முழுவதும் வளர்ந்து வரும் சொகுசு கார்களுக்கான மார்கெட்களில் சிறப்பான லக்ஸரி அனுபவத்தை வழங்க வேண்டும் என்கிற ஜேஎல்ஆர் இந்தியா நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது.
விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட ஷோரூமில் ரேஞ்ச்ரோவர், டிஃபென்டர் மற்றும் டிஸ்கவரி ஆகிய பிராண்டுகளின் வசீகரமான மாடல்கள் கிடைக்கின்றன. அதுமட்டுமின்றி முறையாக சான்று பெற்ற ப்ரீ- ஒன்டு வாகனங்களும் விற்பனைக்காக காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.
இந்த மையத்தில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உதிரிபாகங்கள் மற்றும் பிராண்டட் மெர்ச்சன்டைஸ்களும் கிடைக்கின்றன. பிரத்தியேகமாக உயர் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சர்வீஸ் நிபுணர் குழுவினர் பணியமர்த்தப்பட்ட ஒரு முழுமையான சர்வீஸ் ஒர்க்ஷாப் இருப்பதன் காரணத்தால், வாகனத்திற்கான பராமரிப்பு நேரம் வருகையில் அதற்கான பணிகள் இங்கு சிறப்பாக மேற்கொள்ளப்படும்.
ஜேஎல்ஆர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜன் அம்பா இது குறித்து கூறுகையில், “விஎஸ்டி கிராண்டியர் உடன் இணைந்து கோயம்புத்தூரில் எங்களது புதுப்பிக்கப்பட்ட மையத்தை திறந்து வைப்பது குறித்து நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். வளர்ச்சிக்கு அத்தியாவசியமான முக்கிய மார்கெட்களில், உலகத்தரம் வாய்ந்த ரீடெயில் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சர்வீஸ்களை வழங்குவதில் நாங்கள் அதிக மிகுந்த கவனம் செலுத்துகிறோம். எங்களது புதிய ஒருங்கிணைந்த மையமும் இதே நோக்கத்தினை பிரதிபலிக்கிறது. தென்னிந்தியாவில், கோயம்புத்தூர் ஒரு முக்கியமான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் சொகுசுகார் மார்கெட் ஆகும். புதுப்பிக்கப்பட்ட எங்களது இந்த புதிய மையம்,கோவை நகரத்திலும், அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு, அந்தந்த பிராண்டின் உலகளாவிய தர நிலைகளின்படி ஒரு முழுமையான பிராண்ட் அனுபவத்தை எவ்வித தடையுமின்றி வழங்குமென நம்புகிறோம்,” என்று தெரிவித்தார்.