டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் விநாடி வினா போட்டியின் 25வது பதிப்பு துவக்கம்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்  நிறுவனம், கிராமப்புறம் மற்றும் சிறு நகரங்களில் இருக்கும் மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடத்தி வரும் தனது தனித்துவமிக்க டிசிஎஸ் கிராமப்புற தகவல் தொழில்நுட்ப விநாடி-வினா போட்டியின் 25-வது பதிப்பை கர்நாடக அரசுடன் இணைந்து நடத்துகிறது. இதற்கான முன்பதிவுகள் இப்போது ஆரம்பமாகி உள்ளன.இந்தியாவில் இருக்கும் சிறு நகரங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே தகவல் தொழில்நுட்ப விழிப்புணர்வை மேம்படுத்துவதே இந்த விநாடி-வினா போட்டிகளின் முக்கிய நோக்கமாகும். இந்தியாவின் கிராமப்புற மாணவர்களுக்கான முதன் முதலாக தொடங்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப விநாடி-வினா என லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாடு 2024-ன் ஒரு பகுதியாக, இந்த விநாடி-வினா போட்டியானது இணையம் வாயிலான தேர்வுகள், மெய்நிகர் முறையிலும், நேரடியாக கலந்து கொள்ளும் வகையிலும் விநாடி-வினா சுற்றுகளை நடத்த இருக்கிறது. சோதனைகள், மெய்நிகர் மற்றும் உடல் விநாடி வினா சுற்றுகளின் கலவையை உள்ளடக்கியது. இந்தியா முழுவதும் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து 8 முதல் 12-ம் வகுப்பு வரை  படிக்கும் மாணவர்கள் இந்த மாபெரும் விநாடி-வினா போட்டியில் கலந்து கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். இப்போடி கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு மட்டும் என்பதால், மாநகராட்சி எல்லைக்குள் உட்பட்ட பள்ளிகள் கலந்து கொள்ள இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

டிசிஎஸ் கிராமப்புற தகவல் தொழில்நுட்ப விநாடி-வினா போட்டியானது பல்வேறு துறைகளில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் தொழில்நுட்ப சூழல், வணிகம், அத்துறையில் செயல்பட்டு வருபவர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங்  போன்ற புதிய  போக்குகள் உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வங்கி, கல்வி, பொழுதுபோக்கு, புத்தகங்கள், மல்டிமீடியா, இசை, திரைப்படங்கள், இணையம், விளம்பரம், விளையாட்டு, கேமிங் மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற தகவல் தொழில்நுட்பத்தின் தாக்கத்தை ஏற்படுத்திய அம்சங்களையும் இந்த விநாடி-வினா போட்டி உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்தியா முழுவதுமாக மொத்தம் எட்டு பிராந்திய இறுதிப் போட்டிகள் நடைபெறும். இவற்றில் வெற்றி பெறுபவர்கள் நவம்பர் 2024-ல் பெங்களூருவில் நடைபெறவிருக்கும் தேசிய இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவார்கள். முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடிக்கும் அனைத்து பிராந்திய வெற்றியாளர்களுக்கும் முறையே ரூ.10,000 மற்றும் ரூ.7,000 பரிசுக்காக வெகுமதி அட்டைகள் வழங்கப்படும். தேசிய அளவில் முதல் மற்றும் இரண்டாமிடத்தைப் பிடிக்கும் வெற்றியாளர்களுக்கு டிசிஎஸ் கல்வி உதவித்தொகை முறையே ரூ 100,000 மற்றும் ரூ 50,000 வழங்கப்படும். இந்த விநாடி-வினா போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் அக்டோபர் 01, 2024-க்கு முன்  <https://iur.ls/tcsruralitquiz2024reg>  என்ற இணைய முகவரிக்கு சென்று  விநாடி-வினா போட்டிக்கு பதிவு செய்யலாம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form