லீட் சாம்பியன்ஷிப் 2023 வெற்றியாளர்கள் அறிவிப்பு



 இந்தியாவின் மிகப்பெரிய ஸ்கூல் எட்டெக் நிறுவனமான லீட், ஜனவரி 7ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற ஒரு கிராண்ட் ஃபைனல் நிகழ்வில் லீட் சாம்பியன்ஷிப் 2023 வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள 3000 லீட்-ஆல் இயக்கப்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 1.2 மில்லியன் மாணவர்களுக்கான ஒரு மதிப்புமிக்க, தேசிய அளவிலான தளமான லீட் சாம்பியன்ஷிப்ஸ், கருத்தாடல் , விமர்சன சிந்தனை மற்றும் குழுப்பணி போன்ற 21 ஆம் நூற்றாண்டின் அத்தியாவசிய திறன்களை உருவாக்குகின்ற அதே வேளையில் சிறிய நகரங்களில் உள்ள மாணவர்களுக்குத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பளிக்கிறது. லீட் சாம்பியன்ஷிப்ஸ்  2023 வெற்றியாளர்கள் மடிக்கணினிகள், டேப்லெட்கள் மற்றும் கோப்பைகள் உட்பட ரூ. 10 லட்சம் மதிப்புள்ள அற்புதமான பரிசுகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

லீட் சாம்பியன்ஷிப்ஸ்  2023 இல் ”லிட்டில் சாம்ப்ஸ் மற்றும் 'இங்கிலிஷ்  சாம்ப்ஸ்' பிரிவுகள், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'ரீடிங் சாம்ப்ஸ்' வகையைப் போலவே, கருத்தாடல், கருத்தியல் புரிதல் மற்றும் சிந்தனைத் திறன்களை உருவாக்கி வெளிப்படுத்தும் வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்கியது. 'கோடிங் சாம்ப்ஸ்' வகை மாணவர்களின் படைப்பாற்றல்; பயன்பாட்டு வடிவமைப்பு திறன்கள்; மற்றும் பேசும் திறன் மற்றும் உள்ளடக்க திறன் ஆகியவற்றை வெளிப்படுத்த ஊக்குவித்த அதே வேளையில் 'க்விஸ் சாம்ப்ஸ்' பொது அறிவு, விளையாட்டு, பொழுதுபோக்கு, வரலாறு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. இதில்  சத்தியமங்கலத்தில் உள்ள லிட்டில் ஃப்ளவர் மெட்ரிகுலேஷன் ஹையர் செக்கன்டரி பள்ளியைச் சேர்ந்த அனிதா பி மற்றும் ஆராதனா எஸ்  ‘கோடிங் சாம்பியன்ஸ்’ பிரிவில் வெற்றி பெற்றனர்.

லீட் இன் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் சுமீத் மேத்தா, “லீட் சாம்பியன்ஷிப்ஸ் 2023 இல் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! லீட் சாம்பியன்ஷிப்ஸ்  இந்தியாவின் சிறிய நகரங்கள் மற்றும் பட்டணங்களில்  உள்ள பள்ளி மாணவர்களுக்கு வெளிப்பாடு, அற்புதமான வாய்ப்புகள் மற்றும் புதிய கற்றல் அனுபவங்களைக் கொண்டுவருகிறது; மேலும் புதிய உயரங்களைத் தொடர்ந்து அடையத் தூண்டும் முழுமையான கற்றல் அனுபவங்களிலிருந்து அவர்கள் பெற உதவுகிறது"என்று கூறினார்.

தமிழ்நாடு சத்தியமங்கலம், லிட்டில் ஃப்ளவர் மெட்ரிகுலேஷன் ஹையர் செக்கன்டரி பள்ளி  மாணவிகளான  அனிதா பி மற்றும் ஆராதனா எஸ், “லீட் சாம்பியன்ஷிப்ஸ்  2023 இல்  வெற்றி பெற்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்! சாம்பியன்ஷிப்ஸ் க்குத்  தயாராகி வருவது எங்கள்  கருத்தாடல்  திறன்கள் மற்றும் கற்றல் திறன்கள் குறித்து அதிக நம்பிக்கையுடன் இருக்க எங்களுக்கு உதவியுள்ளது மற்றும் பாடங்களைப் பற்றிய எங்களது  கருத்தியல் புரிதலை வலுப்படுத்த எங்களுக்கு  உதவியது"என்று கூறினார்கள்.

அனிதா பி-ன் சகோதரர் பி.பிரவீன் குமார் மற்றும் ஆராதனா வின்   தாயார் எஸ். மகாலட்சுமி  ஆகியோர் கூறுகையில், “லீட் சாம்பியன்ஷிப்ஸ்  2023 இல்  வென்றதற்காக அனிதா மற்றும் ஆராதனா ஆகியோரைக் குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்பட முடியாது. இந்த வெற்றியானது  அனிதா மற்றும் ஆராதனா வின் ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு தோழர்களிடமிருந்து பெற்ற அவர்களின் அனைத்து ஆதரவின் ஒரு விளைவாக இருக்கிறது. எங்கள் குழந்தையின் திறமைகளை வளர்ப்பதற்கும், ஒரு தேசிய அளவில் பிரகாசிக்க வாய்ப்புகளை வழங்குவதற்கும் லிட்டில் ஃப்ளவர் மெட்ரிகுலேஷன் ஹையர் செக்கன்டரி  பள்ளிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்"என்று கூறினார்கள்.  

லிட்டில் ஃபிளவர் ஹையர் செக்கன்டரி  பள்ளி இன் உரிமையாளர் கே.என். சந்திரஸ்கான் கூறும்பொழுது "லீட் சாம்பியன்ஷிப்ஸ் 2023 இல் அனிதா பி மற்றும் ஆராதனா எஸ் ஆகியோர் வெற்றி பெற்றதைக் கண்டு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். மாணவிகள் எங்கள் பள்ளியை பெருமைப்படுத்தியது மட்டுமல்லாமல், கல்வியில் சிறந்து விளங்கும் உண்மையான உணர்வையும் வெளிப்படுத்தினார்கள் . லீட் உடனான எங்கள் கூட்டாண்மையின் மூலம், எங்கள் மாணவர்கள் ஒரு பிரகாசமான எதிர்காலததைக் கொண்டுள்ளார்கள் மேலும் அவர்களின் தொடர்ச்சியான வெற்றிகளையும் சாதனைகளையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்"என்று கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form