எச்டிஎஃப்சி வங்கி நடத்தும் மெகா கார் லோன் மேளா

இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி, தமிழகத்தில் ஜூலை5 முதல் ஜூலை 7, 2023 வரை மெகா கார்லோன் மேளாவைத் தொடங்க உள்ளது. முன்னணி ஆட்டோமொபைல் பிராண்டுகள் மற்றும் கார் டீலர்ஷிப்களுடன் இணைந்து செயல்படவிருக்கும் 300க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் தமிழ்நாடு முழுவதும் இந்த மேளாவை நடத்த உள்ளது . டீலர்கள் தங்கள் ஆட்டோமொபைல் மாடல்களை காட்சிப்படுத்த கிளைகளில் இருப்பார்கள். இவர்கள்  வாடிக்கையாளர்கள் வாகனங்களை டெஸ்ட் டிரைவ் செய்துப்பார்க்க அனுமதிப்பார்கள். தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கி உடனடியாக கடன் அனுமதிகளை வழங்கும்.

எச்டிஎஃப்சி வங்கி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மலிவு வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகிறது. கார் கடன் மேளா வாடிக்கையாளர்களுக்கு ஆட்டோமொபைல் ஃபைனான்ஸ், குறிப்பாக சிறு- நகர்ப்புற மற்றும் கிராமப்புற இடங்களில் அணுகுவதை எளிதாக்குகிறது.  பலவிதமான திருப்பிச் செலுத்தும் விருப்பத்தேர்வுகள் மற்றும் குறைந்தபட்ச ஆவணங்களுடன் கடன் கோரிக்கைகளை செயலாக்குவதற்கு வங்கி எண்ட்-டு-எண்ட் தீர்வை வழங்கும்.

மார்ச் 31, 2023 இல் முடிவடைந்த ஆண்டில், எச்டிஎஃப்சி வங்கியின் வாகனக் கடன் புத்தக மதிப்பு ரூ.1,17,429 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு, எச்டிஎஃப்சி வங்கி ‘எக்ஸ்பிரஸ் கார் லோன்’ வசதியை அறிமுகப்படுத்தியது, இது ஒரு எண்ட்-டு-எண்ட் டிஜிட்டல் கார் லோன் பயணமாகும், இது டீலர்களின் கணக்குகளில் வெறும் அரை மணி நேரத்திற்குள் கடன் தொகையை வரவு வைக்கும் என எச்டிஎஃப்சி வங்கி செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form