ஜனா சிறு நிதி வங்கி மற்றும் பிஎஃப்எஸ்ஐயின் மணிபால் அகாடமி ஆகியவை ‘ஆஸ்பைரிங் பேங்கர்ஸ் திட்டத்தை’ தொடங்குகின்றன.



பிஎஃப்எஸ்ஐயின் மணிப்பால் அகாடமி, ஜனா சிறு நிதி வங்கியுடன் இணைந்து, அடுத்த தலைமுறையின் தனிநபர் வங்கியாளர்களை ஜனா சிறு நிதி வங்கியில் பணியமர்த்துவது, அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது போன்ற நோக்கத்தோடு, 'ஆஸ்பைரிங் பேங்கர்ஸ் திட்டத்தை' தொடங்கியுள்ளது. பிஎஃப்எஸ்ஐ-ன் மணிப்பால் அகாடமி வழங்கும் இந்த திட்டம் திறமைகளை அடையாளம் கண்டு வேலையில் தீவிர பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அஸ்பைரிங் பேங்கர்ஸ் புரோகிராம் பாடங்கள் மூன்று மாதங்கள் வரை நடத்தப்படும் மற்றும் கட்டணம் ரூபாய் 99,000/- +வரிகள். மூன்று மாத படிப்பு என்பது ஒரு மாத வளாகப் பயிற்சி மற்றும் இரண்டு மாத வேலை பயிற்சி என பிரிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் ஒரு மாத வளாகப் பயிற்சியின் போது ரூபாய் 10,000/- உதவித்தொகையைப் பெறுவார் மற்றும் இரண்டு மாத வேலை பயிற்சிக்கு ரூ 20,000/- பெறுவார். படிப்பை முடித்த பிறகு, விண்ணப்பதாரர் ஜனா சிறு நிதி வங்கியில் ஒரு தனிப்பட்ட வங்கியாளரின் பணிக்காக உதவி மேலாளராக சேருவார். ஒரு தனிப்பட்ட வங்கியாளருக்கான வருடாந்திர ஊதியம் இந்திய ரூபாய் 3,40,000/- மற்றும் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகையை உள்ளடக்கியது. வங்கியில் பணிபுரிந்த இரண்டு ஆண்டுகளில் பாடநெறிக்கு கட்டிய கட்டணம் முழுமையாகத் திருப்பியளிக்கப்படும்.

இந்தத் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள், லீட் உருவாக்குவது, புதிய வாடிக்கையாளர் சேர்ப்பது, வாடிக்கையாளருடனான உறவு மேம்படுத்தவுது, கணக்கு மேலாண்மை மற்றும் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வங்கியின் ஒட்டுமொத்த வருவாய் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் பல்வேறு பணிகளுக்காக பிஎஃப்எஸ்ஐ-ன் மணிபால் அகாடமியால் பயிற்சியளிக்கப்படும். கூடுதலாக, விண்ணப்பிப்பவர்கள் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளருடனான உறவை வளர்க்கவும், செயல்முறை சுகாதாரத்தை பராமரிக்கவும், பரிவர்த்தனைகள், பணம் செலுத்துதல், முதலீடுகள், கடன்கள் மற்றும் ஷாப்பிங் ஆகிய டிஜிட்டல் முறைகளை கையாளவும் கற்றுக்கொள்வார்கள்.

ஜனா சிறு நிதி வங்கியின் தலைமை மனித வள அதிகாரி அமித் ராஜ் பக்ஷி இது குறித்து பேசுகையில், “பிஎஃப்எஸ்ஐயின் மணிப்பால் அகாடமியுடன் இணைந்து 'ஆஸ்பைரிங் பேங்கர்ஸ் திட்டம்' தொடங்கும் போது, அடுத்த தலைமுறை வங்கித் தொழிலின் வல்லுநர்களை வளர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க அடியை எடுத்து வருகிறோம். இந்தத் திட்டம் திறமைகளை அடையாளம் கண்டு பயிற்சி அளிப்பது மட்டுமல்லாமல், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த நிபுணத்துத்துடன் மற்றும் அர்ப்பணிப்புடன் சேவை செய்ய அவர்கள் நன்கு தயாராக இருப்பதையும் உறுதி செய்கிறது என்று தெரிவித்தார்.

மணிப்பால் குளோபல் எஜுகேஷன் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி ராபின் பௌமிக் பேசுகையில், “இன்றைக்கான திறன்களைக் கொண்டு அவர்களின் புதிய பணியாளர்களை வலுப்படுத்த ஜனா சிறு நிதி வங்கியுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வங்கியின் அனைத்து சேவைகளின் முக்கிய அங்கமாக இருப்பதால், ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் வாடிக்கையாளரை மையமாக வைத்து பாடநெறி கட்டமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சேவைகள் கற்றல், வங்கி அடிப்படைகள் மற்றும் வேலையில் இருக்கும் பயிற்சி உத்தரவாதத்தோடு இளம் பட்டதாரிகளிலிருந்து வங்கி நிபுணர்களை உருவாக்குகிறோம்” என்று தெரிவித்தார்”.

Post a Comment

Previous Post Next Post

Contact Form