ஓரா பைன் ஜூவல்லரியின் பண்டிகை கால பிரத்யேக வைர நகைகள்



வைர நகைகளுக்கு புகழ்பெற்ற ஓரா பைன் ஜூவல்லரி கையால் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட புதுமைமிக்க வைர நகைகளை அறிமுகம் செய்திருக்கிறது. ஓராவின் புதிய நகைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் உள்ளன. இவை பாரம்பரியம் மற்றும் சமகால வடிவமைப்புகளை இணைத்து தயாரிக்கப்பட்டுள்ளன.

 நெக்லஸ்கள், வளையல்கள், காதணிகள் உள்ளிட்ட பல்வேறு நகைகள் உங்களை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்கு வைரம் மற்றும் 22 காரட் தங்க நகைகளுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. முன் பணம் இல்லை, வட்டி இல்லா இஎம்ஐ வசதி மற்றும் தங்க நகைகளுக்கு 100 சதவிகிதம் எக்சேஞ்ச் மதிப்பு ஆகிய சலுகைகளும் உள்ளன.

தென் மாநில மக்கள் விரும்பும் வகையில் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் தொங்கல், நெக்லஸ், ஹாரம், காதணி, உள்ளிட்டவற்றை திறமைமிக்க கைவினைக் கலைஞர்களைக் கொண்டு ஓராதயாரித்துள்ளது. வட இந்திய மக்களுக்கு ஏற்ற பவளம் உள்ளிட்ட கற்களை வைத்து அந்த கலாச்சாரம் மற்றும் பண்டிகை காலங்களுக்கு ஏற்ற வகையிலான நகைகளை ஓரா வடிவமைத்திருக்கிறது. 

இதேபோன்று இந்தியாவின் மேற்கு பகுதி மக்கள் விரும்பும் பாரம்பரியமிக்க மங்கல் சூத்திரங்கள் எனப்படும் செயின் மற்றும் வைரங்கள், கருப்பு மணிகளைக் கொண்ட நகைகளை வடிவமைத்துள்ளது.இந்த புதிய நகைகள் நாடு முழுவதும் உள்ள இதன் ஷோரூம்களில் கிடைக்கிறது பண்டிகை காலத்தையொட்டி சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகளை ஓரா வழங்குகிறது.

இது குறித்து ஓரா பைன் ஜூவல்லரி நிர்வாக இயக்குனர் திபு மேத்தா கூறுகையில், பண்டிகைக் காலத்தில், எங்கள் நேர்த்தியான இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வைர நகை கலெக்ஷன்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் புதிய நகைகள் பாரம்பரிய கைவினைத்திறனை சமகால வடிவமைப்புடன் அழகாகக் கலந்து வெளிப்படுத்துகின்றன என்று தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form