லைஃப்செல் இண்டர்நேஷனல் புதிய அறிவிப்பு



இந்தியாவின் அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 நகரங்களில் ஸ்டெம் செல் வங்கி திட்டங்களுக்கான கட்டுபடியாகக்கூடிய மற்றும் அதிகரித்த அணுகலை (access) மேம்படுத்தும் முயற்சியில், லைஃப்செல் இன்டர்நேஷனல் அதன் லைஃப்செல் செலக்ட் திட்டங்களை திருநெல்வேலிக்கு விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. லைஃப்செல் செலக்ட் ஆனது ஸ்டெம் செல் வங்கி திட்டங்களுக்கு குறைந்த செலவு மற்றும் வசதியான அணுகலை (access)  வழங்குகிறது. 

இந்த திட்டங்கள் பெற்றோர்கள் தங்கள் பிறந்த குழந்தைகளின் மதிப்புமிக்க தொப்புள் கொடி இரத்தத்தை பாதுகாக்க உதவுகின்றன. இதில் 90 க்கும் மேற்பட்ட மருத்துவ நிலைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் ஸ்டெம் செல்கள் உள்ளன. இதில் பரம்பரை இரத்தக் கோளாறுகள், வளர்சிதை மாற்றக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு கோளாறுகள் மற்றும் இரத்த புற்றுநோய்கள் போன்றவை அடங்கும்.

தொப்புள் கொடி ஸ்டெம் செல்களை சேமிப்பது வெற்றிகரமான மாற்று அறுவை சிகிச்சைக்கு நெருக்கமான எச்எல்ஏ பொருத்தத்தை கண்டறிதல், வாய்ப்புகளை மேம்படுத்துதல், செதுக்குதலை ஊக்குவித்தல் மற்றும் கிராஃப்ட்-வெர்சஸ்-ஹோஸ்ட் நோயின் (ஜிவிஎச்டி) அபாயத்தை குறைத்தல் போன்ற நன்மைகளை கொண்டுள்ளது. எச்எல்ஏ மேட்ச் என்பது நன்கொடையாளர் மற்றும் பெறுநர் எச்எல்ஏ ஆன்டிஜென்களுக்கு இடையேயான பொருத்தத்தை தீர்மானிக்கும் செயல்முறையாகும், இது நிராகரிப்பதற்கான வாய்ப்பை குறைக்கிறது. 

தற்போது, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 50,000 ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. ஆனாலும், உண்மையில் 2,000 க்கும் குறைவாகவே மேற்கொள்ளப்படுகின்றன. கூடுதலாக, நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக, மெட்ரோ பகுதிகளுக்கு அப்பால், மாற்று அறுவை சிகிச்சைக்கான ஸ்டெம் செல் யூனிட்களுக்கான அணுகல் பற்றாக்குறை உள்ளது.

லைஃப்செல் இந்த இடைவெளியை அதன் ஸ்டெம் செல் வங்கி சேவைகள் மூலம் நிவர்த்தி செய்கிறது. இது தொப்புள் கொடியின் இரத்தத்தை பாதுகாக்க, பாதுகாப்பான மற்றும் நீண்ட கால முறையை வழங்குகிறது. எதிர்காலத்தில் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க பெற்றோருக்கு மதிப்புமிக்க ஆதாரம் இருப்பதை இது உறுதிசெய்கிறது. மேலும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு அலோஜெனிக் மாற்று அறுவை சிகிச்சைக்கான வெற்றிகரமான நன்கொடையாளர் பொருத்தம் கிடைக்கும் வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. 

ஸ்டெம் செல்கள் தொப்புள் கொடி ரத்தத்தில் மட்டுமன்றி வயது வந்தோரின் எலும்பு மஜ்ஜையில் இருந்தும் எடுக்கலாம், மற்ற இடங்களிலிருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல்லை விட, பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல்களில் நன்மைகள் அதிகம் மற்றும் எளிதானது, பாதுகாப்பானது மற்றும் குறைவான வலியுடையது. மற்றவை சரியான பொருத்தத்திற்கு 9-10 அளவுருக்கள் (parameters) தேவை, அதேசமயம் தொப்புள் கொடியின் இரத்தத்திற்கு 6-8 அளவுருக்கள் (parameters) மட்டுமே தேவை. இது ஒரு பொருத்தத்தைக் கண்டறிவதை 10 மடங்கு எளிதாக்குகிறது.

லைஃப்செல் இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மயூர் அபயா கூறுகையில், “தொப்புள் கொடி இரத்தம் பல்வேறு மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு மதிப்புமிக்க ஆதாரமாகும், இது குழந்தைக்கு மட்டுமல்ல, மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும். இருப்பினும், நம்பத்தகுந்த மற்றும் பாதுகாப்பான ஸ்டெம் செல் பேங்கிங் விருப்பங்களுக்கான சேவை அணுகல் (access), பெருநகரங்களுக்கு அப்பால் நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் கிடைப்பதில்லை. இதனால் எதிர்கால பயன்பாட்டிற்காக குடும்பங்கள் இந்த விலைமதிப்பற்ற வளத்தை பாதுகாப்பது கடினம். இந்தியா முழுவதிலும் உள்ள குடும்பங்களுக்கு உலகத் தரம் வாய்ந்த ஸ்டெம் செல் வங்கி சேவைகளை வழங்குவதும், அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய எந்தவொரு தடைகளையும் சமாளிக்க உதவுவதும் எங்கள் நோக்கமாகும்” என்றார்.

லைஃப்செல் செலக்ட், கட்டுபடியாகக்கூடிய வகையில் தொப்புள் கொடி இரத்தப் பாதுகாப்பு திட்டங்கள் மூலம், பல பரம்பரை நோய்கள் மற்றும் கோளாறுகளுக்கு எதிராக குடும்பங்களுக்கு இணையற்ற பாதுகாப்பை வழங்குகிறது. லைஃப்செல் செலக்ட் வழங்கும் கவரேஜ், தனிப்பட்ட மற்றும் நன்கொடையாளர் ஸ்டெம் செல்கள் மூலம் சிகிச்சை தேவைப்படக்கூடிய நிலையில், குழந்தை மற்றும் அவர்களது உடன்பிறப்புகள், பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. கூடுதலாக, லைஃப்செல் செலக்ட் ஆனது ஒவ்வொரு மாற்று அறுவை சிகிச்சைக்கும் ரூ.20 லட்சம் வரை நிதியுதவி வழங்குகிறது. மேலும் குடும்பங்களுக்கு உதவ  வட்டியில்லா இஎம்ஐ திட்டங்களையும் வழங்குகிறது. 


Post a Comment

Previous Post Next Post

Contact Form