2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து காசிக்கு யாத்திரை செல்லும் தமிழர்கள்



தமிழர்கள் காசி மீதும், பாபா விஸ்வநாதர் மீதும் பல நூற்றாண்டுகளாக அபரிமிதமான நம்பிக்கை வைத்திருந்ததற்கான சான்றுகள் இலக்கியங்களில் உள்ளன. சாமானியர்களுடன் தமிழ் மன்னர்களும் அறிவுஜீவிகளும் காசிக்கு வருகை தருகின்றனர். 2300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் நகரங்கள் மற்றும் கிராமங்களின் தெருக்களில் காசியின் பெருமையைப் போற்றும் பாடல்கள் எதிரொலித்ததற்கான சான்றுகள் உள்ளன. வரலாற்று உண்மைகளை எடுத்துக்கொண்டால், காசிக்கு தமிழர்கள் யாத்திரை செல்லும் நடைமுறை இருந்தது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இது தொடங்கி விட்டது.

மூத்த பத்திரிக்கையாளர் சுபாஷ் சந்திரா மேலும் கூறுகையில், “ 16 -ம் நூற்றாண்டில், முகலாய படையெடுப்பாளர்களின் பயம் காரணமாக, தமிழ் சமூகத்தின் காசி பயணத்துக்கு தடை ஏற்பட்டது. காசி விஸ்வநாதர் கோவில் அழிக்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில், காசியின் பெருமை குறைந்து போனதால் வருத்தமடைந்த தமிழ்நாட்டின் பாண்டிய வம்சத்தின் மன்னன் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன், நதிக்கரையில் புதிய காசியைக் கட்டினான். . இந்த  தலம் தென்காசி என்ற பெயரில் இன்றும் பிரபலமாக உள்ளது. 17 -ம் நூற்றாண்டில் திருநெல்வேலியில் பிறந்த புனித குமரகுருபரர், காசியின் இலக்கண கவிதைப் படைப்பான 'காசி கலம்பகம்' எழுதி குமாரசுவாமி மடத்தையும் நிறுவினார். காசி பண்டிதர் மரபை நிறுவிய போது, தமிழ் இலக்கியப்பரம்பரையில் (தமிழ் இலக்கிய மரபு) தமிழ்நாடு எழுச்சி கண்டது

இன்று 19500 -க்கும் மேற்பட்ட மொழி பேச்சுவழக்குகள் நாட்டில் உள்ளன, அவற்றில் காசி மற்றும் தமிழ்நாடு ஆகியவை உலகின் பழமையான மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகியவற்றின் மையங்களாக உள்ளன. சுப்பிரமணிய பாரதி போன்ற முன்னோர்கள் காசியில் தங்கி, சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியைக் கற்று, உள்ளூர் கலாச்சாரத்தை வளப்படுத்தி, தமிழில் சொற்பொழிவுகளை ஆற்றினர். பல்வேறு வாழ்க்கை மரபுகளை இப்படி ஒருங்கிணைத்ததன் மூலம்தான், இந்தியா தனது கலாச்சார நெறிமுறைகளைக் குறிக்கும் சமகால ஒருமைப்பாட்டை பராமரிக்க முடிந்தது.

காசி தமிழ் சங்கமத்தில் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகம், தேசிய புத்தக அறக்கட்டளை, இந்திய மொழிகள் நிறுவனம் மற்றும் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம் ஆகியவற்றின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நூல்கள் பண்டைய சங்கம் மற்றும் நவீன காலம் வரையிலான பாரம்பரிய இலக்கியங்கள் பற்றியவை. இந்த நூல்களில் திருவள்ளுவரின் திருக்குறள், இளங்கோஅடிகளின் சிலப்பதிகாரம், சீத்தலை சாத்தனாரின் மணிமேகலை, கபிலரின் பத்துப்பாட்டு போன்றவையும் அடங்கும் என அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form