ஜேஇஇ மெயின் 2026 சீசன் 1 தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களைகப் பதிவுச் செய்துள்ளனர். இதில் 345 வேதாந்து மாணவர்கள் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று, மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் சாதனையை செய்துள்ளனர்.
மாநிலத்தின் தலைசிறந்த சாதனையாளர்களில் ஒருவரான பரமேஷ்வர் எம், 99.92 சதவீதம் என்ற பிரம்மிக்கத்தக்க மதிப்பெண்ணைப் பெற்றுள்ளார். இந்த முடிவின் பலனாக, தமிழ்நாட்டின் முன்னணி சாதனையாளர்கள் பட்டியலில் அவர்தம் இடத்தைப் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து வருண் ஆதித்யா S 99.77 சதவீதமும், பூமிகா ஷர்மா 99.75 சதவீதமும் பெற்று, மாநிலத்தின் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலில் இணைந்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 வேதாந்து மாணவர்கள் 99.5 சதவீதத்திற்கு மேலும், 26 மாணவர்கள் 99 சதவீதம் என்ற மதிப்பெண்ணையும் கடந்து, உயர்ந்த மதிப்பெண் பிரிவுகளில் தங்களின் சிறந்த திறனை நிரூபித்துள்ளனர்.
வேதந்து தற்போது தமிழ்நாடு முழுவதும் 20 லேர்னிங் சென்டர்களை இயக்கி வருகிறது, மேலும் வேதாந்து இப்போது தங்களின் இரண்டாவது முழுமையான கல்வியாண்டில் அடியெடுத்து வைத்துள்ளன. கடந்த ஆண்டில், தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் இக்கல்வி மையங்கள் தங்களின் கல்வி சாதனைகளை நாளுக்கு நாள் உயர்த்தி வருகின்றன.
இந்த மையங்களுக்குச் சக்தியளிப்பது வெட் ஆகும். இது ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்களுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட தனிப்பட்ட கவனத்தை வலுப்படுத்தும் வேதாந்துவின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த தனிப்பட்ட கற்றல் அமைப்பாகும். ஸ்மார்ட் க்ளிக்கர்ஸ் மூலம், வகுப்பில் மாணவர்களின் பதில்களை உடனுக்குடன் பின்தொடர்ந்து மதிப்பீடு செய்யப்படுகின்றன. இது ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றல் இடைவெளிகளை உடனடியாகக் கண்டறிய உதவுகிறது. வகுப்பறை நேரங்களைத் தாண்டி, மாணவர்கள் தங்களுக்குத் தேவையான ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு அமைக்கப்பட்ட கல்வி வழிகாட்டுதலுக்கு வெட் ஏஐ-யையும், கேள்வி விசைப்பலகையில் பதிவு செய்திகள் மூலமாகவோ அல்லது பதிவேற்றுவதன் மூலமாகவோ 24×7 நேரமும் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள இன்ஸ்டாசால்வையும் பயன்படுத்துகின்றனர். இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் புரிதலை மேம்படுத்தும் வகையில், குறிப்பிட்ட கவனம் செலுத்த வேண்டிய வீடியோக்கள், குறிப்புகள் மற்றும் வினாடி வினாக்களை இந்த அமைப்பு பரிந்துரைக்கிறது.
.png)